புதன், 5 ஆகஸ்ட், 2009

அறிவியல் முன்னேற்றம் வரமா..? சாபமா..?

இந்த தலைப்பை வைத்து ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அறிவியலின் துறித வளர்ச்சியுடன் நமது நாகரீகமும் சேர்ந்து வளர்வதால் ஏர்ப்படும் மாற்றங்களில் சில நன்மையை கொடுக்கிறது. சில நம் உடல் நலத்தையே குழி தோண்டிப்புதைக்கிறது. இது வரமா..? சாபமா..?. என்று நினைக்கயில்.... அதிகாலையிலஎந்திரிச்சி கலப்பைய தூக்கிக்கிட்டு வயக்காடு போரதெல்லாம் "அப்போ" . காலையில எந்திரிச்சி காப்பிய குடிச்சிப்புட்டு கட்சிபேச்சி பேசுராங்க "இப்போ" என்ற நாட்டுப்புற பாடல்தான் நினைவுக்கு வரும்.

விஞ்ஞான வளர்ச்சியானது இன்று உலகத்தையே ஒரு பந்துபோல் சுறுக்கிவிட்டது. ஆம் செல்போன் இண்டர்நெட் இன்னும் எத்தனை எத்தனையோ..! கண்டுபிடிப்புகள். உடல் உழைப்பு குறைந்து இன்று கனிப்பொறியின் முன்னே நடைபிணமாய் அமர்ந்திருக்கிறோம்.

அன்று "எரு" விட்டு பயிர் வளர்த்தோம். இன்று "உரம்" வந்தது. அன்று விழைந்த நெல்லை அருத்து, அடித்து, குத்தி, சாப்பிட்டோம். ஆனால் இன்று அத்தனைக்கும் இயந்திரம். அன்று சளிபிடித்தால் துளசிச்சாறு, வயிறு வலித்தால் வேப்பில்லைச்சாறு...!. இன்று அத்தனைக்கும் ஆங்கில மருத்துவம்.
அன்று கேப்பைப் புட்டு சாப்பிட்ட நாம். இன்று பாஸ்ட்புட் சாப்பிடுவதால் தான் நோய்க்கு அடிமையாகி மாத்திரையே உணவாக உட்கொள்கிறோம். எந்த மாற்றம் வந்தால் எதிர்த்திடலாம் எமன் வரவை..!....


NO+ய்= நோய்


இறைவன்படைத்த,

என்சான் உடம்பில்,

எத்தனை நோய்கள்,


எழுதி முடியாது,

இரவு பகல் போதாது,

விண்னை முட்டும்,

விஞ்ஞானம் வளர்ந்தாலும்,

காட்டாற்று வெள்ளம் - போல்,

கலக்குது பினியெங்கும்..!

பழங்கால பெரியம்மையும்,

இடைக்கால இளம்பிள்ளைவாதமும்,

இன்று அற்றுப் போனாலும்,

புறப்படுது புற்றீசல் - போல்,

புதிய புதிய நோய்கள்..!,

குடிசை முதல் கோபுரம் வரை,

குருட்டு விஜயம் செய்யும்,

கொல்லை நோய்களால்,

எல்லையில்லா துன்பம்..!!

சொல்ல இயலாது - ஏனென்றால்,

காடு கழனி பாடுபட்டு,

சல்லிகாசு சேக்கயில,

கொல்லிவாய் பிசாசு - போல,

எல்லா நோயும் வந்ததனால்,

சேத்ததெல்லாம் வீனாச்சி,

தேத்திய உடம்பும் கூனாச்சி..!-என்று

புழம்பிய கிழவனுக்கு,

புறிந்தது உன்மை..?,

பயிர் வளர உரமிட்டு,

பூச்சியழிய மருந்திட்டு,

விசத்தை நெல்லாக்கி,

நஞ்சை சோறாக்கி உண்டால்,

பாழும் நோய்களெல்லாம் நம் வீட்டில்,

பாய் போட்டல்லவா படுத்திருக்கும்..!,

ஆதலால்

இயற்கை விவசாயம்,

இனிதே செய்வோம்,

உயிரெடுக்கும் நோய்களை,

உலகைவிட்டு துரத்துவோம்.

ஆக்கம்: "கவி" ஹக்


புதன், 8 ஜூலை, 2009

அடுத்து ஆட்சிசெய்வது யார்..?


இந்தோனிசியாவில் இன்று அதிபர் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது. சுகார்த்தோவின் சர்வாதிகார ஆட்சி வீழ்ச்சி அடைந்த பின்னர் நிகழும் இரண்டாவது நேரடி அதிபர் தேர்தல் இதுவாகும்.நடப்பு அதிபர் சுசிலோ பம்பாங் யுதயோனோ மீண்டும் தேர்வு செய்யப்படுவது திண்ணம் என்று கருத்துக் கணிப்புக்கள் காட்டியுள்ளன.

அவரது வெற்றி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அந்த நாட்டில் நிர்வாகச் சீர்திருத்தங்களை அமலாக்கி ஊழலை துடைத்தொழிப்பதற்கு அவர் தொடங்கியுள்ள போராட்டத்திற்கு வலுவூட்டும்.

அந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரும் எதிர்க்கட்சித் தலைவியுமான மெகாவத்தி சுகார்னோ புத்ரியும் துணை அதிபர் யூசோப் காலாவும் அவருடன் போட்டியிடுகின்றனர்.

அவர்களுடன் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பைத் தவிர்ப்பதற்கு போதுமான வாக்குகளைப் பெற முடியும் என்று யுதயோனோ நம்பிக்கை கொண்டுள்ளார்.

அந்த நாட்டில் கிழக்குக் கோடியில் உள்ள பாப்புவா மாநிலத்தில் முதலில் வாக்களிப்பு தொடங்கியது. மாலை ஆறு மணிக்கு நாடு முழுவதும் வாக்களிப்பு முடிவுக்கு வரும்.

234 மில்லியன் மக்கள் வாழும் அந்த நாட்டில் வாக்களிப்பை ஒட்டி ஆயிரக்கணக்கான போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை வாக்காளர் பட்டியலில் இல்லாத ஆனால் அடையாளக் கார்டுகளை வைத்திருக்கும் மக்களும் வாக்களிக்கலாம் என்று எதிர்பாராத தீர்ப்பை வழங்கியது.

அதனால் வாக்காளர் எண்ணிக்கை கூடியுள்ளது.

இந்தோனிசியா தென்கிழக்காசியாவில் பெரிய பொருளாதாரம் ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக அது நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.

ஊழல், உணவுப் பொருள் விலைகள், உலக மயத்தை இந்தோனிசியா எதிர்கொள்வது ஆகியவை தேர்தல் பிரச்சாரத்தில் எழுப்பப்பட்ட முக்கிய விஷயங்கள் ஆகும்

நன்றி; மலேஷியா இன்று

புதன், 24 ஜூன், 2009

வருது புதியசட்டம்- செயல்படுமா..?

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டம் இந்த சட்டசபைக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் மீது அதிமுக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகர், காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவபுண்ணியம் ஆகியோர் பேசினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,

பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தவுடனேயே அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ், இலவச சீருடை போன்றவற்றை வழங்கி இந்த அரசு கல்வியின் தரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறது.

இந் நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வருவது கவலை அளிப்பதாக தெரிவித்த முதல்வர் கருணாநிதி அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

கல்விக் கட்டணங்களில் எல்லா மாநிலங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது ஒரு மோகமாக உருவாகிவிட்டது.

அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்றதை குறிப்பிடலாம்.

சுய நிதி கல்வி நிறுவனங்கள் அவர்களே தங்கள் கல்வி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதால் இந்த விஷயத்தில் மாநில அரசு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்.

இப்போதும் கூட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைத்து பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் குறித்து கண்காணித்து வருகிறோம்.

116 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். நிச்சயமாக பள்ளியின் அங்கீகாரம் ரத்து என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டத்தை இந்தக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்த ஒரு குழு அமைப்பது, மீறினால் நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட ஷரத்துக்கள் இந்த சட்ட மசோதாவில் சேர்க்கப்படும்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு கைகட்டி வேடிக்கை பார்க்காது என்றார் தென்னரசு.

இது தட்ஸ்தமிழ் செய்தி


மக்கள் கருத்து:

ராமசாமி: அட போங்கய்யா..! நீங்கவேற சட்டம் போடுராகலாமுல சட்டம். தனியார் பள்ளிகளை நடத்துவதே அரசியல்வாதிகள்தானப்பா.... அவுகளுக்கு சட்டம் எல்லாம் சக்கரைபொங்கல் மாதிரி இது ஏட்டளவில்தான் இருக்கும்.

அன்வர் : அய்யா.. இலவச பஸ் பாஸ் கொடுக்குறதுனாலய்யோ இலவச சைக்கிள் கொடுக்குறதுனாலயோ கல்வித்தரம் உயர்திராது நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஆங்கிலப் பள்ளிகளுக்கு நிகறான தரமான கல்விமுறை
20 மானவர்களுக்கு ஒரு ஆசிரியர் தரமான கட்டட வசதி பள்ளிக்கூட நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் சக ஆசிரியர்களுடன் அரட்டை அடித்துவிட்டு மாலையில் டியூசன் என்ற பெயரால் காசை பிடுங்கும் ஆசிரியர்களை நீக்கிவிட்டு வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தால் கல்வித்தரம் உயரும் தானாகவே பெற்றோர்களுக்கு ஆங்கிலப்பள்ளி மோகம் நீங்கி தமிழ் பள்ளிகள் பக்கம் திரும்பும். அப்போது நீங்கள் சட்டம் எல்லாம் போடவேண்டாம் தனியார்ப் பள்ளிகள் அவர்களாகவே முன்வந்து கட்டணக்குறைப்பு செய்வார்கள் அல்லது மூடிவிட்டு ஓடிவிடுவார்கள்

டேவிட்: மொதல்ல கல்லூரிகள் வைத்திருப்பவர்கள் அமைச்சராக முடியாதுன்னு சட்டம் போடுங்க. அப்புறம் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு அந்தக்காலத்திலெல்லாம் கல்விச்சாலைகள் திறந்தவர்கள் சேவை மனப்பான்மையோடு திறந்தனர் இப்பொழுது தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த வியாபாரம் கல்விதான்... காலம் கெட்டுக்கெடக்கு சாமி.. அய்யா எங்களுக்கு டிவி வேணாம், கேஸ் அடுப்பு வேணாம், தரமான கல்வி முதல்வகுப்பு தொடங்கி கல்லூரிப்படிப்பு வரை இலவசமாக ஆக்குங்கள் காலம் உங்களை வாழ்த்தும்.

அமெரிக்காவில் ஆவி பிடிக்கத் தடை...?

இளைஞர்களிடையே நிலவும் புகை பிடிக்கும் பழக்கத்திற்குத் தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டம் அமெரிக்காவில் அமலுக்கு வந்துள்ளது.

குடும்ப புகை பிடித்தல் தடை மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற பெயர் கொண்ட இந்த சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை அந்நாட்டு உணவு மற்றும் மருந்துத்துறை மேற்கொள்ளும்.

இந்த சட்டத்தின் மூலம் இளைஞர்களை அதிகம் கவரும் வாசனையான சிகரெட் மற்றும் சிறிய வகை சிகரெட்கள் தடை செய்யப்படும்.

மேலும், லைட்ஸ், மைல்ட் என்ற பெயரில் வெளி வரும் சிகரெட்களுக்கும் தடை விதிக்கப்படும். இதுதவிர புகையிலைப் பொருட்கள் மீது கண்டிப்பாக இனி எச்சரிக்கை வாசகங்களையும் பொறிக்க வேண்டும்.

அதேபோல இனிமேல் தயாரிக்கப்படும் சிகரெட்களில் நிக்கோடின் அளவையும் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் குறைக்க வேண்டும்.

இந்த சட்டத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் நடந்தது.

அப்போது ஒபாமா பேசுகையில் பல காலமாகவே நாம் எதிர்பார்த்து வந்த மாற்றத்தை இந்த சட்டம் தரும். நமது குழந்தைகளை அபாயத்திலிருந்து காக்க இந்த மாற்றம் வந்துள்ளது என்றார்.

அமெரிக்காவில் புகை பிடிக்கும் பழக்கத்தால் பலர் இறக்கிறார்கள். இறப்பு அளவு குறைந்த போதிலும் கூட ஆண்டுக்கு 4 லட்சம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்தால் உயிரிழக்கிறார்கள். புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆண்டுதோறும் செலவழிக்கும் தொகை 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அரசின் இந்த சட்டத்தை பிரபல சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஆல்ட்ரியா குரூப் வரவேற்றுள்ளது. இருப்பினும் புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீய அம்சங்கள் குறித்து இளைஞர்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என இது கூறியுள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் மால்போரோ, விர்ஜீனியா ஸ்லிம்ஸ், பேசிக், செஸ்டர்பீல்ட் ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அமெரிக்க இளைஞர்களிடையே கணிசமான அளவுக்கு இந்த சட்டத்திற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

52 சதவீதம் பேர் இதை எதிர்த்துள்ளனர். 46 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.

சட்டத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஒபாமா இப்படிச் சொன்னார் - சிகரெட்டை கைவிடுவது என்பது இளைஞர்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதினருக்கு எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். நானும் ஒரு காலத்தில் டீன் ஏஜில் இருந்தவன்தான். இருப்பினும் முயன்றால் முடியாதது இல்லை என்றார் ஒபாமா.

சனி, 13 ஜூன், 2009

மதுரையில் அயல்நாடு தொழிலாளர் நல அமைப்பு தொடக்கம்

மதுரை : மலேசியாவில் வேலை பார்ப்போரின் துயரங்களைத் தீர்ப்பதற்காக அயலக தொழிலாளர் நல அமைப்பு என்ற ஒன்று மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் கூட்டத்தி்ல ஏராளமானோர் கலந்து கொண்டு தாங்கள் வெளிநாடுளில் பட்ட கஷ்டங்களையும், தங்களது குடும்பத்தினர் பட்ட, பட்டு வரும் துயரங்களையும் கண்ணீருடன் விளக்கினர்.

இவர்களில் பலரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அனிதாகுமாரி என்பவரின் கணவர் ரவி கடந்த 2006ம் ஆண்டு ஏஜென்டு மூலம் மலேசியா போனார். ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்திருக்கிறது.

இந்த நிலையில் 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இரவு மனைவியைத் தொடர்பு கொண்டு பேசிய அவர், தன்னை சித்திரவதை செய்கிறார்கள் என்று கூறி கதறியிருக்கிறார். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லையாம்.

கணவரை மீட்க கோரி மத்திய அமைச்சர் வயலார் ரவி உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். ஒரு மகள், மகனுடன் கண்ணீரும் கம்பலையுமாக கணவரை நினைத்து வேதனையில் மூழ்கியிருக்கிறார் அனிதா குமாரி.

கொய்யாவை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவர்...

திருவாரூர் மாவட்டம் சிறுபுலியூரைச் சேர்ந்த வினோத்தின் கதை கொடுமையானது. போலி பாஸ்போர்ட் மூலம் இவரை ஏஜென்ட் ஒருவர் மலேசியா வுக்கு அனுப்பி விட்டார்.

அங்கு போனதும்தான் தான் போலி பாஸ்போர்ட்டில் வந்தது தெரிய வந்திருக்கிறது வினோத்துக்கு. சாப்பாடு கூட தராமல் கொடுமைப்படுத்தி வைத்துள்ளனர்.

மலைப் பகுதியில் கிடைத்த கொய்யாப் பழங்களைப் பறித்து அதை சாப்பிட்டு ஜீவனம் நடத்தி வந்துள்ளார் வினோத்.

எப்படியோ தட்டுத் தடுமாறி ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அங்கும் கூட கொடுமைகள் தொடர்ந்துள்ளன. சரியாக தூங்கக் கூட விடாமல் வேலைவாங்கியுள்ளனர். பெரும் சிரமத்திற்குப் பின்னர் விட்டால் போதும் என்று தாய் மண்ணுக்கே திரும்பி விட்டார் வினோத்.

இவர்களைப் போல கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகத்தி்னர் வேலை பார்க்கும் இடங்களிலும், சிறைகளிலும் கொடுமைக்குள்ளாகி வருகின்றனராம். இவர்களை மீட்கவும், அங்கு போய் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்கவும், மத்திய அரசும், மாநில அரசும் சற்று அக்கறை காட்ட வேண்டும் என்கிறது அயலக தொழிலாளர் நல அமைப்பு.

நன்றி : தட்ஸ் தமிழ்

புதன், 10 ஜூன், 2009

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.- ஐ.நா.


கடந்த 2008 டிசம்பர் மாதம் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மூலம் குழந்தைகள் உட்பட 1350 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சுமார் 5400 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குலை விசாரித்த ஐ.நா விசாரணைக் குழு இஸ்ரேல் போர் குற்றம் புரிந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
யூத மத நீதிபதி ரிச்சர்ட் கோல்ட் ஸ்டோண் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இந்த விசாரணைக் குழு தாக்குதலைப் பற்றிய செய்திகள் மற்றும் புகைப் படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே இஸ்ரேலின் அத்து மீறலை உறுதி செய்துள்ளது.

மேலும் பல பகுதிகளில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வீசியது. பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் ஐ.நா. தலைமையகம் உட்பட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியதைப் பற்றி இஸ்ரேல் தெளிவான பதிலொன்றையும் சமர்ப்பிக்கவில்லை.

மேலும் இஸ்ரேலின் அத்து மீறல் சம்பந்தமான பல ஆதாரங்களை விசாரணைக் குழு முன்பாக ஹமாஸ் இயக்கமும் அளித்திருக்கின்றது.

எல்லாமே இலவசம்...?

சேலை வாங்கினால் கைக்குட்டை இலவசம். மாடுவாங்கினால் கன்றுக்குட்டி இலவசம். இது வழமையாக கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் நம் தங்கத்தமிழகத்திலோ என்னை ஆட்சியில் அமரவைத்தால் அரிசி முதல் அல்வா வரை இலவசம். இலவசப் பொருட்கள் உன்மையிலேயே ஏழைகளுக்கு பயனளிக்கிறதா..?.

அன்மையில் பாராளுமன்றத்திலே லால்லு பிரசாத் அவர்கள் பேசினார். அரசு வழங்கும் இலவசப்பொருட்களினால் ஏழைகள் பயனடைவது இல்லை. மாறாக அரசியல்வாதிகள் தான் பயன் அடைகிறார்கள். நீங்கள் இலவசமாக வழங்கும் அரிசியை வடித்து வைத்துக்கொண்டு என்னசெய்வது அதற்கு ஊற்றிக்கொள்ள யார் கொடுப்பார்கள். என்று அவருக்கெ உரிய லொல்லுடன் பேசினார்.

" நீ பசித்திருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாக வழங்குவதை விட நீ அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு அது அவனுக்கு அனுதினமும் சோறு போடும்" இது சீனப் பழமொழி இது ஏன் நம் தமிழக அரசியல் தழைவர்களுக்கு புரியவில்லை.

அரசியல்வாதிகள் தான் கொடுக்கிறார்கள் என்றால் இந்த மக்கள் ஏன் மயங்கினார்கள். இது நம் நாட்டிற்க்கு ஆரோக்கியமானதல்ல இலவசத்தை விட்டுவிட்டு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குங்கள். அனைவருக்கும் வேலை என்ற நிலை வந்துவிட்டால். சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிச்செல்லலாம் நாம். இதற்கு தடைக்கற்களாக இருக்கும் இலவசம் என்னும் பிச்சையை..? நாம்தான் தடுக்கவேண்டும். ஆம் நம் காசை வாங்கிக்கொண்டு நமக்கே பிச்சைபோடுகிறார்கள். அய்யா...... ஒரு தொலைக்காட்சிப்பெட்டி எம்புட்டு காசு இன்னக்கெல்லாம் ரூ.1500 வரும் அத இலவசமா வாங்கிக்கிட்டு மல்லாக்க படுத்துக்கிட்டு சீரியல் பாக்குறோம். ஆனா நாம் அன்றாடம் பயன்படுத்தும் பஸ்கட்டணம்,மளிகை பொருட்கள்,மின்கட்டணம், இன்னும் எத்தனை எத்தனையோ கட்டணங்களை குறைத்தால் (இலவசமாக அல்ல) ரூ 1500 என்ன ரூ10000 க்கே சொந்தமா தொலைக்காட்சிப்பெட்டி வாங்கலாமே..?. இது ஆரம்பம் தான் இது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டால்.... இனி வரும் காலங்களில் குடிமகன்களுக்ககு போத்தல் இலவசம், புகைமகன்களுக்கு பாக்கெட் இலவசம் என்பார்கள் எச்சரிக்கை "விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொல்வார்"

ஞாயிறு, 31 மே, 2009

உலகத் தமிழர்களின் தமிழீழ கனவு நிறைவேறும்..!!


ஐந்தாம் கட்ட ஈழப்போரை பிரபாகரன் முன்னெடுப்பார், உலகத்தமிழர்களின் தமிழீழ கனவு நிறைவேறும் என்று அதிரிட்டுக் கூறுகிறார் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி. இராமசாமி.

“பிரபாகரன் வீரச்சாவடைந்தாரா, உயிரோடு உள்ளாரா?? என்பதுதான் இன்றைய நிலையில் உலகத்தமிழர்களால் உற்று நோக்கப்படும் விடயமாக உள்ளது”, என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

இராமசாமி விடுத்துள்ள முழு அறிக்கை:


“புலிகளை வென்று விட்டதாக கூறி வெற்று மாயையை நம்பி கும்மாளமடிக்கும் சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ள “பிரபாகரனின் உடல்” படங்கள் முற்றிலும் கேலிக்குரியது, கோமாளித்தனமானது.

கடந்த மே 18-ஆம் தேதி இலங்கை இராணுவம் பிரபாகரனையும் மற்றும் பல முக்கிய தளபதிகளையும் வெற்றிகரமாக கொன்று விட்டதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டு கொண்டாடியது. அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பின், புலிகளின் அனைத்துலக செய்தித்தொடர்பாளர் க.பத்மநாபன், புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 17-ஆம் தேதி நடந்த சமரில் வீரமரணம் அடைந்ததாக ஓர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த செய்திகளில் தெரியும் முரண்பாடுகளை காணும்போது இந்த செய்திகளெல்லாம் வெறும் வதந்திகளாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுவதன் மூலம் புலிகளின் இயக்கத்தை உடைக்க இலங்கை இராணுவம் செய்யும் சதி வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. புலிப்போராளிகளை உளவியல் மூலமாக பலவீனப்படுத்தும் அதே வேளை, அனைத்துலக நாடுகளிடம் இருந்து தமிழர் பகுதிகளில் மீழ்கட்டமைப்பு என்ற சாக்கில் பொருளுதவிகளை பெறுவதற்காகவும், இலங்கை இனவெறி அரசு இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றுகிறது என்பது மட்டும் திண்ணம். அதே வேளையில், தலைவர் பிரபாகரன் உடல் என்று கூறி சிங்கள இராணுவம் காட்டும் உடல் பிரபாகரனுடையுதுதானா என்ற சந்தேகமும் உலகத்தமிழர்கள் மத்தியில் எழும்பியுள்ளது. கண்டிப்பாக அது பிராபகரனுடைய உடலாக இருக்காது என்பதுதான் அனைவரது நம்பிக்கையும் கூட.

புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் க.பத்மநாபனின் அறிக்கையும், உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள இராணுவம் பிரபாகரன் மரணம் என்று அறிவித்து ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு பிறகு பத்மநாபனின் அறிக்கை வெளிவந்துள்ளது மிகப்பெரும் முரண்பாடாக உள்ளது. கடந்த காலங்களில் புலிகள் எப்பொழுதுமே தங்களது போராளிகளின் வீரமரணத்தை பற்றிய அறிவிப்புகளை உடனுக்குடன் வெளியிட்டு விடுவார்கள். ஆனால் இம்முறை ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு பின்புதான் க.பத்மநாபன் அறிவிக்கிறார், புலிகளின் தலைவரும், தளபதிகளும் வீரமரணம் அடைந்து விட்டார்கள் என்று.

இந்த ஒரு முரண்பாடே, உலக தமிழர்கள் மத்தியில் பல கேள்விகளை ஏற்படுத்தி விட்டது. அப்படி, தலைவரும் அவர்தம் குடும்பத்தினரும், மூத்த தளபதிகளும் உண்மையிலேயே வீரமரணம் அடைந்திருப்பார்கள் என்றால், அதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? அவர்களின் உடல்கள் எங்கே?

பெரும்பாலானோர் நம்புவதைப் போல் புலிகளின் தலைவர் பிரபாகரன், சுமார் 300 போரளிகளோடு, இறுதிக்கட்ட தாக்குதலுக்கு மூன்று வாரங்கள் இருக்கும் போதே போர் சூன்ய பகுதியிலிருந்து வெளியேறிவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாறான செய்திகளில் களத்திலிருக்கும் போரளிகளிடமிருந்து வருவதால், இந்த செய்திகள் உண்மையாகவே இருக்கக்கூடும். தமிழகத்தலைவர்கள் வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோரும் இதையே கூறுகின்றனர். தலைவர் பிரபாகரன் வெகு விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என்றும் அவர்கள் மிக அழுத்தமாக கூறுகின்றனர். அதுதான் உண்மை என்று நாமும் நம்புவோம்.

தலைவர் பிரபாகரன் அவர்கள், 5-ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை, உலகத்தமிழர்களின் மத்தியில் மிக ஆழமாக வேருன்றியுள்ளது. 5-ஆம் கட்ட ஈழப்போருக்கான ஏற்பாடுகளை தலைவர் முன்னெடுத்து, தானே இம்முறையும் போரை முன்னின்று நடத்துவார் என்றே தெரிகிறது.

இதற்கிடையில், பிரபாகரனைப் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ளதொடர்பை பற்றிய கேள்விகளும் எழவே செய்கிறது. பிரபாகரனைப் பற்றிய கே.பத்மநாபனின் அறிவிப்பிற்கும் இந்தியாவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று உலகத்தமிழர்கள் மத்தியில் பலமான சந்தேகம் இருக்கவே செய்கிறது.

இலங்கை இனவெறி அரசு, ஈழத்தமிழர்களின் மேல் தொடுத்த மிகக்கொடுரமான இன அழிப்புப்போரை இந்தியாதான் முழுமூச்சாக ஆதரித்தது என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். ஈழப்போரை, வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் களமாக இந்தியா ஆக்கிவிட்டிருந்தது என்பது தெள்ளத்தெளிவான விடயம். புலிகள் 5-ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுத்து ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவார்கள் என்பதும் இந்தியாவிற்கும் தெரியும்,

ஆகவே புலிகளை வைத்துக்கொண்டு சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படுத்துவதை இந்தியா விருமபவில்லை. ஆகவே, அவசர,அவசரமாக புலிகள் தலைமை அழிந்து விட்டது என்று கூறி, புலிகள் அல்லாத தமிழர்களான டக்ளஸ் தேவனந்தா, ஆனந்த சிவசங்கரி ஆகியோரை முன்னிறுத்தி ஓர் சமரச உடன்படிக்கை அல்லது அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த விரும்பியிருக்கக்கூடும். இந்தியாவின் இந்த இராசத்தந்திர சதியில் க.பத்மநாபனும் விழுந்து விட்டாரா என்ற கேள்வி பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களிடம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் பற்றி பேசுவதற்கு, அவர்களின் பிரதிநிதிகளுக்கு மட்டுமே உரிமையுள்ளது. புலிகளை தமிழர்களின் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்ளாத இந்தியா, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழமக்களின் பிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடும் பேசுவதற்கு மறுப்பது ஏன் என்ற வினா உலகத்தமிழர்களின் ஒட்டு மொத்த கேள்வியாகும். ஈழத்தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாகத்தான் எந்தவொரு அதிகாரப்பகிர்வு யோசனையும் முன்னெடுக்கப்பட வேண்டும். எப்பொழுதுமே ஈழத்தமிழர்களுக்கு உடன்பாடில்லாத டக்ளஸ் தேவனந்தாவுடனோ, ஆனந்த சிவசங்கரியுடனோ, அல்லது துரோகி கருணாவோடோ எந்தவொரு பேச்சுகளும் நடைப்பெறக்கூடாது என்பதுதான் புலம்பெயந்து வாழ்ந்து வரும் தமிழர்களின் கருத்தும் கூட.

இறுதியாக, பிரபாகரன் என்ற மாவீரன் பற்றி வரும் செய்திகளில், பல செய்திகள் வெறும் வதந்திகள் என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். இப்பொழுது இருப்பதை விட பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வந்தது தமிழீழப் போராட்டம்.

அவ்வாறான பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளையெல்லாம் கடந்து தமிழீழ போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன். ஆகவே, இப்பொழுது நிகழும் இந்த குழப்பமிகுந்த சூழ்நிலையையும் கடந்து, ஐந்தாம் கட்ட ஈழப்போரை தலைவர் பிரபாகரன் முன்னெடுப்பார் என்று தாராளமாக உலக்த்தமிழர்கள் நம்பலாம்.

மரணத்தை வென்ற மாவீரன் பிரபாகரன். பிரபாகரனுக்கு மரணமே கிடையாது. என்றென்றும் தமிழர்களின் மனதிலெல்லாம் அவர் வாழ்ந்துக்கொண்டுதானிருப்பார். பூமிப்பந்தில் தமிழர் என்ற இனம் உள்ளவரை பிரபாகரனின் புகழை சரித்திரங்கள் பாடும். ஆகவே, உலகத்தமிழர்கள் அனைவரும், குறிப்பாக மலேசியத்தமிழர்களான நாம், ஈழத்தமிழர்களுக்கு நம்மால் ஆன உதவிகளயெல்லாம் செய்து, அவர்களின் வாழ்வுரிமை போராட்டம் வெற்றிப்பெற உறுதுணையாக இருப்போமாக.”

நன்றி: மலேசியா இன்று.

செவ்வாய், 26 மே, 2009

பாலியல் - ஓர் இஸ்லாம் பார்வை

இன்றைய உலகு இருவகையான படையெடுப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அவையாவன:

1. இராணுவ ரீதியான படையெடுப்பு
2. சிந்தனாரீதியான கலாசாரப் படையெடுப்பு

முதல்வகைப் படையெடுப்பைப் போலவே இரண்டாம் படையெடுப்பும் உலகில் பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

'உலகமயமாக்கல்' எனும் பெயரில் இன்றைய உலகில் திணிக்கப்பட்டுவரும் நவீன காலனித்துவம் அரசியல், பொருளாதார ரீதியான அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்வதை மாத்திரமன்றி சிந்தனா ரீதயாகவும், கலாசார ரீதியாகவும் உலகை அடிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.

இந்த வகையில் மேற்குலகின் உலகாயத, சடவாத சிந்தனைகளும், கலாசாரமும் மூன்றாம் மண்டல நாடுகளில் பொதுவாகவும் இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் திட்டமிட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. உணவுவகைகள், குடிபானங்கள், உடைகள், நகைச்சுவை, காட்டூண்கள், மொழி, இசை, விளையாட்டுக்கள் முதலான சாதாரண அம்சங்கள் முதல் அனைத்தும் மேற்குலக கலாசாரத்தை பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.

உலகமமயமாதலும் பாலியல் சீர்கேடுகளும்

மேற்குலகம் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற ஆண், பெண் உறவை விரும்புகின்றது. எனவே, உலகமயமாக்கல் மூலம் உலகின் ஏனைய நாடுகளிலும் இந்நிலையை அது உருவாக்க விரும்புகின்றது. இஸ்லாமிய உலகிலோ கட்டுக்கோப்பான குடும்ப சமூக அமைப்பு காணப்படுகின்றது. எனவே, மேற்குலகு இவ்விறுக்கமான அமைப்பை தகர்ப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. தனது சுதந்திரமான, எத்தகைய தார்மீக, ஆன்மீக கட்டுப்பாடுகளுமற்ற கலாசாரத்தை உலகமயப்படுத்துவதற்காக அவ்வப்போது சர்வதேச மாநாடுகளையும் நடாத்தி வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கெய்ரோவிலும், பீஜினிலும் நடைபெற்ற சனத்தொகை மாநாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இம்மாநாடுகளில் பெறப்பட்ட தீர்மானங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:

1. திருமணத்தின் மூலமோ, திருமணமின்றியோ ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் உறவு அங்கீகரிக்கப்படத்தக்கதாகும்.
2. ஆணும் பெண்ணும் மணமுடிப்பது போலவே ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணமுடிக்க முடியும்

ஆண், பெண் பால் வேறுபட்டை (Gender perspective) மறுக்கும் இவர்கள் கணவன், மனைவி என்ற புனிதமான உறவையும் கொச்சைப்படுத்துகின்றனர். கணவனை வாழ்க்கைத்துணைவர் (Life Partner) என்ற அளவில் மாத்திரமே இவர்கள் அங்கீகரிக்கின்றனர். சட்டரீதியற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளைக் கூட Natural Baby என அழைத்து அங்கீகாரம் வழங்குகின்றனர். தற்போது அதனை Love Baby என அழைக்க முற்பட்டுள்ளனர். இவ்வாறு கிழக்குலகில் பொதுவாகவும், இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் பேணப்படுகின்ற இறுக்கமான குடும்ப அமைப்பை சீர்குலைக்க கையாளப்படும் உத்திகளுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.

1. சினிமா
2. தொலைக்காட்சி
3. வானொலி
4. இன்டர்நெட்
5. பொப் பாடல்கள்
6. சஞ்சிகைகள்
7. விளம்பரங்கள்
8. நவீன மோஸ்த்தர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் (Fashion show)
9. அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics)

இவ்வாறு தொடர்பாடல் ஊடகங்கள், பல்தேசிய கம்பனிகள் முதலானவற்றுக்கூடாக மேற்குலகு தனது கலாசார திணிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. Holly Wood திரைப்படங்களின் செல்வாக்கின் விளைவாக Bolly Wood திரைப்படங்களும் வன்முறையையும், ஆபாசத்தையும் மிகக்கேவலமாக அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன. இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கூட ஒவ்வொரு நான்கிலும் மூன்று ஆபாசத் திரைப்படங்களாக அமைந்துள்ளன. இன்றைய சினிமாக்களில் கதையில்லை. பாடங்களோ படிப்பினைகளோ இல்லை. குறைந்தது மொழியையாவது காண முடியாது. தமிழ், ஹிந்தி சினிமாக்களில் இப்போது வன்முறையையும் ஆபாசத்தையும் தவிர வேறெதையும் பார்க்க முடியாது. குறிப்பாக தமிழ் சினிமாப்பாடல்கள் ஒரு கட்டுரையில் உதாரணத்திற்காகவேணும் மேற்கோள் காட்ட முடியாதளவிற்கு அருவெறுக்கத்தக்க ஆபாச வர்ணனைகளாக அமைந்துள்ளன. பெண்களை போகப்பொருளாகவும், போதைப்பொருளாகவும் காட்டும் வகையிலேயே பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. விரகம் விரசமாகி, காதல் பாலுறவாகி, காதலர்கள் காமுகர்களாக சித்தரிக்கப்படும் அவலத்தைத்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவில் காணமுடிகின்றது.
ஆபாசத் திரைப்படங்கள், வெப்தளங்கள், வீடியோக்கள், நூல்கள், சஞ்சிகைகள் முதலானவை மேற்குலகிற்கு அதன் கலாசாரத்தை பரப்புவதற்கான ஊடகங்களாக மட்டுமன்றி உலகநாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்கான மிகச் சிறந்த வழியாகவும் அமைந்துள்ளன. இன்றைய உலகின் மிகவும் இலாபகரமான வியாபாரமாக ஆபாசத்தை சந்தைப்படுத்துவது காணப்படுகின்றது.
மேற்கண்ட கட்டுப்பாடற்ற சுதந்திர ஆண், பெண் உறவு கலாசாரம் உலகமயப்படுத்தப்பட்டதன் விளைவை இன்றைய உலகம் மிக மோசமாக அனுபவிக்கத் துவங்கியுள்ளது. இன்று இக்கலாசாரத்தின் பரவல் மனித சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்திவருகின்றது. இக்கலாசாரத்தின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:

1. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
2. சட்டபூர்வமற்ற கருத்தரிப்பு
3. கருக்கலைப்பு
4. கற்பழிப்பு
5. தன்னினச்சேர்க்கை
6. தாயோ அல்லது தந்தையோ இல்லாத (Single Parents) குழந்தைகள்
7. ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்
8. விவாகரத்து
9. தற்கொலை
10. போதைவஸ்துப் பாவனை

இன்றைய உலகில் பற்றி எரிகின்ற பிரச்சினையாக மாறியுள்ள பாலியல் சீர்கேடுகள் தொடர்பான பிரச்சினைக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இஸ்லாமிய நோக்கில் பாலியல்

ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். உலகவாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.

அணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

''மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.'' (51:49)

''அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.'' (36:36)

திருமணம், துறவறம், விபசாரம்

மிருக உலகம், தாவர உலகம் உட்பட ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் சுதந்திரமாக ஈடுபடுகின்றன. அந்த சுதந்திரத்தை அல்லாஹ் அவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனைப் பொறுத்தவரையில் அவன் தனது பால் உணர்ச்சியை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.

இன்றைய சமயசார்பற்ற - சடவாத மேற்குலக கலாசாரம், மனிதன் தனது பாலுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள எத்தகைய கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ, ஆன்மீக, தார்மீக ஒழுங்குகளோ அவசியமில்லை எனக் கருதுகின்றது. திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமே அன்றி வேறில்லை என்பது இந்தக் கலாசாரத்தின் நிலைப்பாடாகும். இக்கருத்தியலின் பயங்கர விளைவுகளை இன்றைய உலகம் எவ்வாறு அனுபவிக்கின்றது என்பதை மேலே கண்டோம்.

மறுபக்கத்தில், மனிதன் உடல் இச்சையை முழுமையாக கட்டுப்படுத்தல் வேண்டும். அது மிருக உணர்வாகும். அது ஆன்மீக விமோசனத்திற்குத் தடையானது என்று கூறும் துறவறக் கொள்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் துறவறப்போக்கைக் கைக்கொள்ள முயற்சி செய்த உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் போன்ற நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம்.

இஸ்லாம் பாலுணர்வை சுதந்திரமாக, எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றித் தீர்த்துக் கொள்வதை தடைசெய்வது போலவே சம்சார வாழ்க்கையை துறக்கும் துறவறத்தையும் பிரமச்சாரியத்தையும் விலக்கி, இரண்டிற்கும் இடையே திருமணம் என்ற ஒரு நெறியை அமைத்திருக்கின்றது. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாகவும் நாகரிகமானதாகவும் அமைய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.

திருமண உடன்படிக்கையின்றி ஏற்படும் ஆண் - பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை 'ஸினா' (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.
விபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.

''நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.'' (17:32)

விபச்சாரத்திற்கு வழிவகுப்பவை

இவ்வடிப்படையில் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:

1. அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் மற்றும் சுதந்திரமாகப் பழகுதல்.

இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:
'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.' (அஹ்மத்)
'உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.' (புகாரி, முஸ்லிம்)

குறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய உறவினர்களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகுவது கூடாது. இதனை நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி)

2. அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்

ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

'அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.' (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:
'இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.' (புகாரி)

3. அவ்ரத்தை காட்டுவதும், பார்ப்பதும்

அவ்ரத்தை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்குகின்றது.

இவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கு புனிதமானதும் கௌரவமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.

இஸ்லாத்தின் ஒளியில் திருமணத்தினால் விளையும் நன்மைகளை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்:

1. இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி, அவர்களைக் கொண்ட குடும்பங்களை அமைத்து, இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும்.இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் ஒரு பிரதான இடத்தைப் பெறுகின்றது. இஸ்லாத்தை குடும்பவியல் சார்ந்த மார்க்கம் (Family Oriented Religion) என வர்ணிப்பர். குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம் (Micro Society) என கருதப்படுகின்றது. ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும். அக்கோட்டையில் எவ்வித ஓட்டையும் தோன்றாமல் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்ப அங்கத்தவர்களைச் சார்ந்ததாகும். குடும்பம் எனும் கோட்டையை பாதுகாக்கும் சிப்பாய்களாக குடும்ப அங்கத்தவர்கள் இருக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் பெற்ற குடும்பம் எனும் நிறுவனத்தின் நுழைவாயிலாக இருப்பது திருமணம் ஆகும். திருமணம் இன்றி குடும்பம் உருவாவது சாத்தியமற்றதாகும்.
2. மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானதாகும். அதனைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதுமானதும், பாதுகாப்பானதும், கௌரவமானதுமான வழியாக திருமணம் விளங்குகின்றது.
3. குழந்தைச் செல்வத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகவும், இனப்பெருக்கத்திற்கான சீரிய முறையாகவும் இருப்பது திருமணமாகும்.
4. தாய்மை உணர்வு (Motherhood), தந்தை உணர்வு (Fatherhood) சகோதர உறவு (Brotherhood) முதலான உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. திருமணமே உணர்வுகளை உருவாக்கி போஷித்து வளர்க்கக் கூடியதாகும்.
5. மணவாழ்வு மனிதனில் சுறுசுறுப்பை ஏற்படுத்தவல்லது. அது மனிதனுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதோடு அவனை பொறுப்புணர்ச்சி உள்ளவனாகவும் மாற்றுகின்றது. இந்த வகையில் உழைப்பு அதிகரித்து, உற்பத்தி பெருகி, மனித வாழ்வு வளம் பெற மணவாழ்வு வழிகோலுகின்றது.
6. வாழ்க்கையுடன் தொடர்பான பொறுப்புக்கள் ஆண், பெண் இருபாலாருக்குமிடையே சரியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. திருமணத்திற்கூடாக இத்தகைய பொறுப்புக்கள் கணவன், மனைவிக்கிடையேயும், வீட்டின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான வாய்ப்புக் கிட்டுகின்றது.
7. குடும்பங்களுக்கிடையே தொடர்புகள் உருவாகி, பரஸ்பர அன்பும் ஒத்துழைப்பும் நிலவுகின்ற ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாவதற்கும் திருமணமே காரணமாக அமைகின்றது.
8. மனஅழுத்தம், உளஇறுக்கம், கவலைகள் முதலான உளரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று நிறைவானதும் நிம்மதியானதுமான ஒரு வாழ்வுக்கு திருமணம் சிறந்த வழியாகவும் விளங்குகின்றது. திருமணம் முடித்தவர்களின் ஆயுள் திருமணம் முடிக்காதவர்களின் ஆயுளை விட கூடியதாகும் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.

திருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது
''நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.'' (30:21)

குடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள்

இல்லற வாழ்வுக்கும் அதன் நுழைவாயிலான திருமணத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் அம்சங்களை அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.

துர்நடத்தை

விபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் - பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவை யாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும். இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.

இவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன. இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப்புள்ளி முறைகோடான பாலியல் உறவுகள் என்பதை அறியாவதவர் எவரும் இல்லை. மனநோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடைசெய்துள்ளது.

ஓரினச்சேர்க்கை

ஏறத்தாழ ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தன்னினச்சேர்க்கை என்ற தரங்கெட்ட செயலில் ஈடுபட்ட நபி லூத் (அலை) அவர்களின் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் அவர்களின் இக்குற்றச் செயல்களின் காரணமாக அவர்கள் எவ்வாறு பயங்கரமாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றது. (பார்க்க: ஸூறத்து அஷ்ஷுஅரா : 172-174)

மனிதனின் மனத்தையும் குணத்தையும் இயல்பையும் இறைத்தொடர்பையும் கெடுத்து, இம்மை, மறுமை ஈருலக வாழ்வையும் பாழ்படுத்தக்கூடிய ஓரினச்சேர்க்கை என்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பது ஷரீஆவின் சட்டத்தீர்ப்பாகும்.

விபசாரம்

ஓரினச்சேர்க்கையைப் போலவே விபசாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் - பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.

விபசாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபசாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

விபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
'ஒருவர் விபசாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்)
'விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
வருமானத்தை அறுத்துவிடும்
ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)

எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்;வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்;வின் பேரருளாகும்.

நன்றி: www.sheikhagar.org

திங்கள், 25 மே, 2009

"ஒற்றுமை" சொல்லும் எருமை



காட்டில் கொழுத்த எருமைக்கூட்டம் ஒன்று எப்போதும் ஒன்றாகவே மேய்ச்சலுக்கு சென்று ஒன்றாகவே படுக்கைக்கும் செல்லும் பழக்கமுடையன. இவை பலமுறை எதிரிகளை ஒன்றாக சேர்ந்து ஓட ஓட விரட்டி அடித்திருக்கின்றன.

ஆனால் காட்டு ராஜாவான சிங்கம் எப்படியாவது எருமைகளின் மாமிசத்தை ருசிக்க என்னியது. இருப்பினும் எருமைகளின் கூற்மையான கொம்பைக்கண்டுதான் அச்சமுற்றது. இதற்கு வழி என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது. அவ்வழியே ஒரு நரி வந்தது. சிங்கத்தின் கவலைதோய்ந்த முகத்தைக்கண்ட நரி காரணத்தை கேட்டறிந்து சிரித்தது இவ்வளவுதானா..? கவலையை விடுங்கள் எனக்கு ஒரு நாள் மட்டும் அவகாசம் தாருங்கள் அதன் பிறகு பாருங்கள் என் புத்தி கூற்மையை என்றது நரி.

அடுத்த நாளே தனது வேலையை ஆரம்பித்தது நரி. ஒவ்வொரு எருமையையும் தனித் தனியாக சந்தித்த நரி. "நீ ரொம்ப பயந்தாங்கொள்ளியாம். கோழையாம். அதனால் தான் நீ மற்ற எருமைகளின் துணையோடு திரிகிறாயாம். என்று மற்ற எருமைகள் உன்னை தாழ்வாகப் பேசிக்கொள்கின்றன" என்று தனது வஞ்சக சூழ்ச்சியை அவிழ்த்து விட்டது.

அடுத்தநாள் சதியை மதியால் வெல்லத் தெரியாத எருமைகள் தனிதனியே பிரிந்து மேயத்தொடங்கின. சிங்கத்தின் வேலை சுலபமானது நாளொரு எருமையாக கொன்று தனது ஆசையை தீர்த்துக்க்கொண்டது.

இந்த கதை எதற்கு என்றால் ஒரு சமுதாயத்தினுடைய எழுச்சியும் வளர்ச்சியும் ஒற்றுமை என்ற அச்சாணியிலேதான் உள்ளது. ஒற்றுமை குலைந்ததனால் அழிவையும் இழிவையும் தழுவிக்கொண்ட சமுதாயங்கள் ஏராளம்.

தமிழீழக்கனவும் தவிடுபொடியானது இந்த ஒற்றுமையின்மையால் தான். இனி எஞ்சியிருக்கும் சமுதாயமாவது ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப் பிடித்துக்கொண்டால் கானொளியில் கண்டதைப்போன்று வெற்றிபெற்ற சமுதாயமாக வாழலாம்.

ஞாயிறு, 24 மே, 2009

திரைகடல் கடந்து (???) தேடு..!


அயல்நாடு சென்று வேலை செய்பவர்களில் சிலர் வீட்டில் கட்டியவள் இருக்கிறாள் என்பதையே மறந்து குட்டுச்சுவரா போவதும் உண்டு. சிலர் காரியத்தில் கண்னா இருந்து பொருள் ஈட்டியதும் குடும்பத்தை கவனிப்பவர்களும் உண்டு. இப்படித்தான்..................

திரைகடல் கடந்து திரவியம் தேட சென்ற ஒருவன்,
திசைமாறி சென்றதினால் திக்கற்று தெருவிலே நிற்கிறாள் ஒருத்தி..!!,
இருப்பது போதும் என்று நினைக்காத அவளின்மீது குற்றமா..?
இச்சையை அடக்கமுடியாத அவன் மீது குற்றமா..?,
எதுவாகிலும் குழந்தைகள் என்ன குற்றம் செய்தார்கள்..!,
ஏன் இந்த இளமையில் வறுமை..!!,
இதோ சந்திக்கு வந்தவள் சிந்தித்து கூறுகிறாள்.........


என்மகன் மூத்தபயல்,

ஏழாவது படிக்கிறான்,

எம்பி எம்பி ஓட்டிப்போக,

சைக்கிள் ஒன்னு கேட்கிறான்,

இல்லேன்னு சொல்ல,

பெத்த மணம் வரல..!

வாங்கிக் கொடுக்கவோ,

வக்கத்தவளுக்கு வழியில்லை..!!,

இளையவன் பொறந்த,

இரண்டு மாசத்துல,

வெளிநாடு போன எம்புருசன்,

மாதங்கள் கரைந்தோட,

வருடங்கள் உருண்டோட,

வருசமும் பத்தாச்சி..!!

வீடுவந்து சேரலீங்க...?,

அவ்ககூட போனவ்கள்லாம்,

கட்டிட்டாங்க அடுக்குமாடி..!,

ஆனா எங்கவீட்டு மண்சுவரு,

போனமாசம் அடித்த,

பொயல் காற்றில்,

பொத்தென்று சாஞ்சிருச்சி..!!,

ஓலைக்கீத்து வச்சி,

ஒருபக்கமா அடச்சிருக்கேன்..?,

சீமையில எனக்கொறு,

சக்கலத்தி இருக்கான்னு..!

வந்தவங்க வாய்வழியா,

வதந்தியா தெரிஞ்சிக்கிட்டேன்..!!,

ம்ம்ம்ம்........

வாக்கப்பட்டு வரயில நான்..?,

நாப்பது சவரன் நகை போட்டு.!

நஞ்சை புஞ்சை நாலு ஏக்கரும்..!!,

கட்டியவரு ஓட்டிப்போக,

டி வி எஸ் மோட்டாரும்..!!!,

இன்னும் எத்தனைய சொல்லுவேன் நான்..!,

ஏன்னா........

இத்தனையும் வித்துட்டுதான்,

கப்பலேறி போனாரு..!!,

ஒன்னு ரெண்டாகுமென்று,

நான் நினைத்தேன்..?,

இன்னொருத்தி வருவான்னு..!!,

கனவில்கூட நினைக்கலையே..


ஆக்கம்: "கவி" ஹக்

வியாழன், 14 மே, 2009

பணநாயகம் வெல்லுமா..?


தஞ்சாவூர் தொகுதியின் வேட்பாளர் SS.பழனிமானிக்கம். இந்த முறையும் தன் பதவியை தக்கவைத்துக்கொள்ள பணத்தை வாரி இறைத்துள்ளார். இது திமுக விற்கு கைவந்த கலை என்றாலும் தஞ்சாவூர் தொகுதியிலே இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் தஞ்சாவூரோடு புதிதாக இணைந்த பகுதிகளான பட்டுக்கோட்டை , பேராவூரணி போன்ற பகுதிகளில் ஒரு ஓட்டுக்கு ரூ. 100 முதல் ரூ. 500 வரை வினியோகித்திருக்கிறார்கள். இது இதுவரை கொள்ளையடித்த பணமா..? . இனிமேல் கொள்ளை அடிக்கப்போகும் பணமா..?. தகுதியான வேட்பாளரும் பணவலிமை இல்லாமல் தோல்வி அடைய இதுவே காரணம். கிராமப்பகுதிகளான பத்துக்காடு அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒட்டுக்கு ரூ.100 என்று வழங்கியிருக்கிறார்கள். இதற்கு விடை 16 ந் தேதி தெரியும். வெல்வது பணநாயகமா..?. ஜனநாயாகமா..?. என்று. சென்னை மத்திய தொகுதியிலே நடந்ததைப் பார்த்தால் பணமும், ரவுடியிசமும் சேர்ந்த முழு உருவமான திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிவிடும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை..!!.

ஞாயிறு, 3 மே, 2009

கலைஞரின் "தூள்' காமெடி

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.....!!

சூரியனின் சூத்திர அரசியல்..!

இலையின் ஈழ ஆதரவு..!!

மாம்பழத்தின் முதலைக்கண்ணீர்..!

பம்பரத்தின் பரபரப்பு பேச்சு..!!

முரசின் முடிவில்லா நிலை..!!

இன்னும் எத்தனைக் கட்சிகள்...?

அத்தனையும் ஆடுவது நாடகம்..?

அண்டப்புழுகு.. ஆகாச புழுகு கேள்விப்பட்டு இருப்போம்,

இதுதான் அரசியல் புழுகு..!!

தமிழக மக்கள் ஏமாந்தது போதும்....!

ஈழ மக்களே நீங்களுமா..?

அத்தனையும் நாடகம்...!

தேர்தலுக்கு பிறகு வெழுத்துறும்...!!

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

மாண்ட தமிழனின் மரண கணக்கெடுப்பு....!!


2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி2009

Tamil Ethnic Cleansing Index

Last Update: Friday, 24 APRIL 2009, 04:15 AM GMT


படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்

Tamils KILLED 8,324

படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள்

Tamils critically Wounded 15,912

வன்னியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்

Tamils Killed in Vanni 8,239

வன்னியில் படுகாயப் படுத்தப்பட்ட தமிழர்கள்

Tamils CRITICALLY Wounded in Vanni 15,896

சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்

Tamils Killed UNDER AREAS OF sRI LANKAN OCCUPATION / ADMINISTRATION 85

சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள்

Tamils CRITICALLY Wounded UNDER AREAS OF sRI LANKAN OCCUPATION / ADMINISTRATION 16

சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் பலவந்தமாய் கடத்தப்பட்டோர் அல்லது காணமல் போனோர்

ENFORCED Tamil Disappearances UNDER AREAS OF sRI LANKAN OCCUPATION / ADMINISTRATION 298

சிறிலங்கா படைகளால் கைதானோர்

Tamils Arrested by Sri Lankan Armed forces 1,771


இந்தக் குறிகாட்டிக்கான தகவல்கள் உரிய முறையில் ஆதாரபூர்வமான தரவுகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. மருத்துவமனை வட்டாரங்கள், நீதித்துறை வட்டாரங்கள், வடக்கு-கிழக்கு மனித உரிமைச் செயலகம் மற்றும் நம்பகத்தன்டையுடைய ஊடகச் செய்திகள் ஆகியவற்றிலிருந்து மிகவும் கவனமாகச் சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த குறிகாட்டி அமைக்கப்பட்டுள்ளது.


This index is being updated based on firsthand information obtained from Hospital authorities, Police and Judiciary sources in Tamil Eelam and Sri Lanka, The North East Secretariat of Human Rights and credible media outlets.

(நன்றி: புதினம்)

சனி, 25 ஏப்ரல், 2009

அன்னியத் தொழிலாளியின் உழைப்பை உறுஞ்சும் ஒட்டுன்னிகள்..!


கொளுத்தியெடுக்கும் கடுமையான வெய்யிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடி நிற்கின்றனர். சாப்பாட்டுக்குக் கூடப் போதாத தங்களது சம்பளத்தை உயர்த்தக் கோரியும், தாங்கள் அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப்படுவதை எதிர்த்தும் அவர்களது போராட்டம் தொடங்குகிறது.

போராட்டத்தை ஒடுக்கக் கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. இராணுவம் வரவழைக்கப்பட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. ஹெலிகாப்டரிலிருந்து கண்ணீர்ப் புகைகுண்டுகள் வீசப்படுகின்றன. கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை. முன்னணியாளர்கள் நாட்டைவிட்டே வெளியேற்றப்படுகின்றனர்.

பல்லாயிரம் தமிழர்களின் கனவு தேசமாக இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில்தான் இவையனைத்தும் நடைபெற்றன. அங்கே போராடி, சிறை சென்ற தொழிலாளர்களில் பலர் தமிழர்கள். துபாயில் வேலை என்பதை மக்கள் மிகவும் பெருமையாகக் கருதுகின்றனர். அதனால்தான் துபாய்க்கு அனுப்புவதாகச் சொல்பவர்களிடம், பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் இன்னமும் தமிழகத்தில் இருக்கின்றனர்.

துபாயின் ஜொலிக்கும் ஆடம்பர மாளிகைகளுக்குப் பின்னால் பல லட்சம் தொழிலாளர்களின் அயராத உழைப்பு இருக்கிறது. தங்களது இரத்தத்தை வியர்வையாய்ச் சிந்தி, அந்தப் பாலைவன தேசத்தைச் சொர்க்க பூமியாக மாற்றிவரும் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. நாள் முழுவதும் நகரத்தில் கடுமையாக வேலை செய்யும் அவர்கள், அந்நகரத்தில் தங்குவதற்கு அனுமதியில்லை. நகரத்துக்கு வெளியே பாலைவனத்துக்கு அருகேயுள்ள தொழிலாளர் குடியிருப்பில், ஒரே அறையில் பத்து, பன்னிரெண்டு பேர்வரை ஆட்டு மந்தைகளைப் போல அடைக்கப்படுகின்றனர்.

அதிகாலை எழுந்து சமைத்துவிட்டு வேலைக்குச் சென்றால், வேலையிலிருந்து திரும்ப நள்ளிரவாகிவிடும். வேலைப் பளுவோ மிகவும் அதிகம். வேலை செய்யும் இடத்துக்கு சென்று வர போக்குவரத்து வசதியில்லை. அதற்கென அவர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டும் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளமோ மாதத்திற்கு இந்திய ரூபாயில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரைதான். பல லட்சங்கள் கடன் வாங்கி அங்கு செல்லும் தொழிலாளர்கள் அந்தச் சம்பளத்தைக் கொண்டு வாங்கிய கடனைக் கூட அடைக்க முடியாது.

குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை வேலை செய்தால்தான் ஓரளவுக்காவது சம்பாதிக்க முடியும் என்ற நிலையில், தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தை அங்கு அழைத்துச் செல்லவும் முடியாது. அப்படிச் செய்யவேண்டுமானால் அவர்கள் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கவேண்டும். இதனால், வெறும் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தொழிலாளி ஆண்டுக்கணக்கில் குடும்பத்தைப் பிரிந்து வாழவேண்டும். திருமணமான சில மாதங்களில் குடும்பத்தைப் பிரிந்து போய், குழந்தை வளர்ந்த பிறகு வருபவர்களும் உண்டு.

தங்களது நிலைபற்றி ஒரு இந்தியத் தொழிலாளி கூறும்போது, ""நாங்கள் துபாய்க்கு வருவதற்கு முன்னர் பல கனவுகளோடு வந்தோம். ஆனால் இங்கு எங்களுக்கு வாழ்க்கையே இல்லையென்று இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது'' எனத் தொழிலாளர்களின் குமுறலை வெளிப்படுத்தினார். இன்னொருவரோ, ""சூப்பர்வைசர் வேலை எனக் கூறினார்கள்; அதனால் ஊரில் வளர்த்து வந்த ஆடுமாடுகளை விற்று, நிலத்தை அடமானம் வைத்துவிட்டு வந்தேன்; ஆனால் இங்கு வந்தவுடன் ஒட்டகம் மேய்க்க விட்டுவிட்டார்கள்'' என்று வருந்துகிறார். துபாய்க்கு வந்தவுடன், தொழிலாளர்களின் கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்டு) நிறுவனத்தினர் பிடுங்கிவைத்துக் கொள்கின்றனர். இதன்மூலம் நிறுவனத்தினர் சொல்லுக்குத் தொழிலாளர்கள் கட்டுப்படவேண்டியிருக்கிறது. 8 மணிநேர வேலை, மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே ஓவர்டைம் என்று கூறப்பட்டாலும், உண்மையில் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டியிருக்கிறது.

இவற்றையெல்லாம் பொறுத்துப் பார்த்தும் பலனில்லாததால், தொழிலாளர்கள் ஒன்றுகூடிப் போராட ஆரம்பித்தனர். கடந்த நவம்பரில் துபாயின் மிகப்பெரிய கட்டிட நிறுவனமான ""அராப் டெக்''கின் 40,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்தியர், பாகிஸ்தானியர் என்ற தேச முரண்பாடுகளைக் கடந்து, இந்து, முஸ்லீம் என்ற மதப்பிரிவினைகளைக் கடந்து, தொழிலாளி என்ற உணர்வில் ஒன்று சேர்ந்து அவர்கள் நடத்திய போராட்டம் உலகின் கவனத்தையும் ஈர்த்தது. விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் போது 3 தொழிலாளர்கள் இறந்ததையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடங்கியது. இதேபோல குவைத்திலும் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. கடுமையான பாலைவன வெய்யிலில் தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை வாங்குவது, பாதுகாப்புக் கருவிகள் எதுவும் தராமல் ஆபத்தான வேலைகளைச் செய்யச் சொல்வது, குறைவான கூலி ஆகியவற்றை எதிர்த்துத் தொழிலாளர்கள் போராடினர்.

போராடிய தொழிலாளர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். கசையடி பெற்றனர். முன்னணியாளர்கள் தாக்கப்பட்டனர். போலீசும் இராணுவமும் வரவழைக்கப்பட்டு போராட்டங்கள் கடுமையாக நசுக்கப்பட்டன. தொழிலாளர்கள் பாதிக்கப்படும்போது வாய்மூடி மவுனமாக இருந்த இந்தியத் தூதரகம், தொழிலாளர் போராட்டம் வெடித்தவுடன் அதனைத் திசைதிருப்பும் விதமாக, குறைந்தபட்ச கூலி என்ற கருத்தை மட்டும் முன்வைத்தது.

இந்த போராட்டத்தினால் உருவான நெருக்கடியினை சமாளிக்க துபாய் அரசாங்கம் தொழிலாளர் நலச்சட்டம் என்ற பெயரில், தொழிலாளர் நலனுக்கே எதிரான ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டம் வேலை நிறுத்தத்தை தடை செய்வதோடு, அதில் ஈடுபடுபவர்களையும் கடுமையாக தண்டிக்க வழிவகை செய்கிறது. உழைக்கும் பெண்களுக்கு எதிரான விதிகளை இச்சட்டம் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு கூட்டாட்சியில் மட்டும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த அறுபதாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கான அடிப்படை உரிமையைக் கூட இந்தச் சட்டம் வழங்க மறுக்கிறது.

உலகமயமாக்கலின் பெயரில் தேசம் கடந்து பன்னாட்டு நிதி மூலதனங்கள் துபாயில் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக்கொண்டு பாலைவனத்துக்கு நடுவே மிகப்பெரிய நகரங்களை உருவாக்குவது, உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடங்களைக் கட்டுவது, கடலுக்கு நடுவில் ஈச்சமர வடிவிலான ஓட்டல்களைக் கட்டுவது என ஒரு மாய உலகைக் கட்டியமைக்கும் பணியில் ஏகாதிபத்தியங்கள் ஈடுபட்டுள்ளன. அதற்கு தெற்காசிய கூலித்தொழிலாளிகளின் அடிமை உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கின்றனர். ஐரோப்பிய நகரங்களுக்கு இணையான தரத்தில், அதே சமயம் மிகவும் மலிவான கூலியில் நகரங்களை உருவாக்க முடிகிறது என்பதால், உலக முதலாளிகள் துபாயில் முதலீடு செய்ய போட்டி போடுகின்றனர். இப்படி மூலதனம் பல்கிப் பெருக, தங்கு தடையற்ற சுதந்திரம் வழங்கியுள்ள ஏகாதிபத்தியங்கள், தொழிலாளர்களது சுதந்திரத்தை மட்டும் கிள்ளுக்கீரையாக்கியுள்ளன.

அண்மைக்கால ஏகாதிபத்திய பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு அரபு நாடுகளில் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கின்ற நிலையில், பெறுகின்ற சம்பளத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை உணவுக்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி துபாய் சென்று வேலைக்கு சேர்ந்தவர்கள், அந்தக் கடனை எப்படி அடைப்பது எனத் தெரியாமல் பரிதவிக்கின்றனர். விட்டால் போதும் என்று சொந்த நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பேர் வரை இந்தியாவுக்கு திரும்ப விமானச் சீட்டுக்குப் பதிவு செய்துள்ளனர்.

மலிவான கூலி கொடுத்து தொழிலாளர்களை சுரண்டி வரும் அரபு நிறுவனங்களோ தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக இல்லை. ""இரும்பு, கற்கள், சிமெண்ட்டு என அனைத்துக் கட்டுமானப் பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. ஆனால், தொழிலாளர்களின் விலை மட்டும் அப்படியே மலிவாக இருப்பதுதான் எங்களுக்கு சவுகரியமாக இருக்கிறது'' என்று அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.

இந்திய தொழிலாளர்களை கரும்புத் தோட்டங்களில் கசக்கி பிழிந்து, தன்னை வளப்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போன்று, தெற்காசிய நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது துபாய். துபாயின் உயர்ந்து நிற்கும் மாளிகைகளுக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கை அடங்கியிருக்கிறது. இத்துயரங்களும் குமுறல்களும் எரிமலையாக வெடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.


நன்றி: மதி- தமிழ் அரங்கம்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

அரசியல் காமெடி..!

நான் you tube வீடியோ தொகுப்புகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த காமெடி வீடியோ காட்சியை நண்பர் ஒருவர் பதிந்திருந்தார். ஆமாங்க.. அது காமெடி இல்லை அத்தனையும் உன்மை. தமிழ் நாட்டை இத்தனை வருடமா ஆண்டு அனுபவித்தவர்கள் கூறுபோட்டுவித்தவர்கள் குடுமிபிடி சண்டை போட்டிருந்தால் எப்படி இருக்கும். நான் பார்த்ததை என் நண்பர்களும் காண இதோ.............

சனி, 18 ஏப்ரல், 2009

போடுங்கம்மா ஓட்டு..! இந்த மாதிரி ஆள பார்த்து..?


'அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று சினிமாவில் வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... நிஜ வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். படித்தவர்களும் பண்புள்ளவர்களும்கூட இந்த சாக்கடைக்கு பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்.இந்த நிலையில், 'சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என காலெடுத்து வைத்திருக்கிறார் 29 வயதே ஆன சரத்பாபு. பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் என முகம் மாறிப் போயிருக்கும் இன்றைய அரசியலில், அறிவையும் உழைப்பையும் கேடயமாகக் கொண்டு தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

சரத்பாபு.நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு.ஆம். சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் இத்தனை பட்டங்களையும் பெற்றார் சரத்பாபு. பட்டங்கள் மட்டுமா?இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு. ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவது வழக்கமாக இருக்க... சரத்பாபு எடுத்தது மாறுபட்ட முடிவு. பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.

இத்தனை தகுதிகள் இருந்தாலும், இதோ சாந்தமாக தென்சென்னை தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார் சரத். பிரசாரம் முடித்த ஒரு மாலைப் பொழுதில், அவருடைய ராயப்பேட்டை அலுவலகத்தில் அவரை சந்தித்தோம்.ஒரு டிபிக்கல் அரசியல் கட்சி அலுவலகம் போல் இல்லாமல், ஒரு காலேஜ் காம்பஸ் மாதிரி இருந்தது அலுவலகம். கம்ப்யூட்டரில் வாக்காளர் பெயர் பட்டியலை பார்த்து விவாதித்தபடி, தென்சென்னை வரைபடத்தை டேபிளில் விரித்து வைத்து, நண்பர்களுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அந்த வேலைகளுக்கிடையே நம்மிடம் பேசினார் சரத்பாபு.''என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.ஆனாலும் என் வயித்துக்கும், அறிவுக்கும் பட்டினி போடாம நல்லா படிக்க வச்சாங்க. படித்து முடிச்சதும் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் வந்துச்சு. எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. எங்க குடும்பம் பட்டிருந்த கடனை அடைக்க ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். பிறகு, அம்மா நடத்தி வந்த அதே இட்லி கடையை நடத்த ஆரம்பிச்சேன். தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி பதினாறு அடி பாய்ஞ்சு ஆகணுமில்லையா? அதனால கடைய கொஞ்சம் பெரிசா ஆரம்பிச்சேன். சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத்னு பல ஊர்கள்ல இருக்கும் பல பல்கலைக்கழக கேன்டீன்களை இப்ப நடத்திக்கிட்டு இருக்கேன். வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன்.

பணம் எந்த விதத்துலயும் என்னை மாத்திடலை. முன்ன இருந்த அதே மடிப்பாக்கம் ஏரியா வீட்லதான் இப்பவும் இருக்கேன். சின்னப் புள்ளையில இருந்து பாத்துப் பழகின மாமா பொண்ணைத்தான் கட்டிக்கிட்டேன். நான் டாக்டர் கிடையாது. ஆனா, ஸ்கூலுக்கு போற ஒரு பையனை பார்த்தாலே அவன் சாப்பிட்டிருக்கானா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவேன். கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம். அவன் சாப்பிட ஏதாவது வழி செய்யணுமில்லையா..? அதனாலதான் தென்சென்னை வேட்பாளரா போட்டி போடறேன். நான் போட்டி போடறேன்னு கேள்விப்பட்டதுமே, எனக்கு அறிமுகம் இல்லாதவங்ககூட என்னோட சேர்ந்து எனக்காக வாக்கு சேகரிக்கிறாங்க. அரசியல்னாலே ஒதுங்கிப் போறவங்களை, குறிப்பா இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து அதை சேவை செய்கிற தளமா மாத்தணும். அதுதான் என்னோட ஒரே திட்டம்!'' என நெஞ்சை நிமிர்த்துகிறார் சரத்பாபு.

( இது மாதிரி இளைஞர்கள் அரசியளுக்கு வந்தால் சாதி , மதம், இனம், மொழி என்று பார்க்காமல் படித்தவன் சுரு சுருப்பாக இயங்குவான் என்பதை மட்டும் கருத்தில்கொண்டு வாக்களிப்பார்கள் மக்கள்).

"போடுங்கம்மா ஓட்டு படித்த இளைஞர்களை பார்த்து".

நன்றி : ஜுனியர் விகடன்

நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

கள்ள ஓட்டை எல்லாம் நல்ல ஓட்டா மாற்றுவது எப்படி..?


பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் பம்பரமாய் சுழன்றுகொண்டு இருப்பார்கள். எந்தந்த பகுதிகளில் எப்படியெல்லாம் பொய்சொல்லலாம் வாக்குறுதிகளை அள்ளிவீசலாம் என்று யோசித்து யோசித்தே பெரும்பாலும் அரசியல்வாதிகள் வழுக்கையாகவே காணப்படுகிறார்கள். பாராளுமன்றத்தை தூக்கி நிறுத்தும் உருப்பினர்கள் பணத்தாலேயே நிர்னயிக்கப்படுகிறார்கள். சாதியை ஒழிப்போம் சாதி இல்லா தமிழ்நாடு உருவாக்குவோம் என்று முழங்குபர்கள் எல்லாம். அந்த சாதி அங்க வெல்லுமா..?. இந்த சாதி நம்மை ஆதரிக்குமா என்று சாதிக்கொறு சங்கங்களை சேர்த்துக்கொண்டு சகட்டு மேனிக்கு புழுகுவார்கள். இன்னும் சம்பாரிக்க ஏதாவது வழிகிடைக்காதா என்று கூனிக்குறுகி ஓட்டு கேட்கும் அரசியல்வாதிகளும். அவர்களின் இனிப்பான பேச்சைக்கேட்டு விழிபிதுங்கும் வாக்காளர்கலும். தான் இங்கே கதாநாயகர்கள்.

இதெல்லாம் அரசியல்ல சகஜம்பா..!!. ன்னு நீங்க சொல்றது எனக்கு புரியிது. சாக்கடையை நோண்டினா நாறத்தானே செய்யும். பாத்தீங்களா...? நான் சொல்லவந்தது என்ன . இப்ப சொல்றது என்ன . ஒரேயொறு வேண்டுகோள்ங்க..?. அதாவது ஒரு நாட்டினுடைய வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களித்து ஒருவர் வெற்றிபெற்றால் தான் அது முழுமையான வெற்றி. வெரும் 40% முதல் 60% வரை ஓட்டு விழுந்தால் மற்றவர்கள் என்ன ஆனார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களில் லட்சக்கனக்கானவர்கள் வக்களிக்க இயலாமல் போய்விடுகிறது. இதை பயன்படுத்தி கள்ள ஓட்டு போட்டு தகுதியே இல்லாத ஒருவன் வெற்றி பெருகிறான் .

இதற்கு வழிதான் என்ன..?. தமிழர்கள் அதிகமாக பிழைப்பைத் தேடி செல்லும் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், மேழும் எங்கெல்லாம் இந்திய கடப்பிதழ் உள்ளவர்கள் நிறைந்து இருக்கிறார்களோ அங்கெல்லாம் அந்த அந்த நாட்டு இந்தி (இந்திய) தூதரகம் மூலமாக அவர்களும் வாக்களிக்க வழிவகை செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் ஒவ்வொறு இந்திய குடிமகனும் தங்களுடைய வாக்குரிமையை செழுத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுக்களாம். இந்தியாவைவிட வரியநாடான இந்தோனேசியாவில் இம்முறை நடைமுறையில் உள்ளது.

சென்றவாரம் அங்கு நடந்த தேர்த்லில் கூட அண்டை நாடான மலேசியாவில் வேலை செய்யும் இந்தோனேசியர்கள் வாக்களிக்க ஏதுவாக ஒவ்வொரு தபால் அலுவலகத்திலும் அதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு வக்குரிமையை செழுத்தினார்கள். இது போன்ற ஏற்ப்பாடுகளை இந்திய அரசாங்கமும். மேற்கொண்டால். கள்ள ஓட்டை தவிர்த்து நல்ல ஓட்டை பெற்று வெள்ளலாம். எந்த ஆட்சியாளர்களாவது முயற்சி செய்வார்களா..?


(என் கூற்றில் உன்மை இருந்தால், உடன்பாடு இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடுங்கள் உங்கள் மனக்கண்னைத் திறந்து.)

வியாழன், 16 ஏப்ரல், 2009

துபாயின் உயரிய "MRM" விருது பெற்றது தமிழரின் நிருவனம்.?



துபாயின் உயரிய கௌரவமிக்க "சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்" வியாபார விருது (Business Award), ரியல் எஸ்டேட் பிரிவுக்காக தமிழ் நிறுவனமான "ETA STAR PROPERTY DEVELOPER" நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்ற வருடம் ரியல் எஸ்டேட் ஜாம்பாவனான "EMAAR" நிறுவனமே இந்த விருதை"TAMEER" மற்றும் "UNION PROPERTY" போன்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட போது இந்த வருடம் இந்த பிரிவின் விருதை ஒரே நிறுவனம் அதிலும் தமிழ் நிறுவனம் தட்டிச்சென்றது மேலும் சிறப்பு.


இன்று காலை துபாய் "மதீனத் ஜுமைரா" வில் நடந்த சிறப்பு மிக்க விழாவில்,
இந்த பெருமை மிக்க விருதை, அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு. முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ETA குழுமத்தின் தலைவர் "வியாபார விஞ்ஞானி" உயர்திரு.செய்யது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சென்ற வருடம் கட்டுமானப் பிரிவில் "ETA ASCON" இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது என்றாலும், உலக பொருளாதார வீழ்ச்சி எனும் சுழற்காற்று வீசிவரும் இந்த வேளையில் இப்படி ஒரு பெருமைமிக்க சாதனை விருதை தட்டிச்செல்வது சாதாரண விசயமில்லை, அதை ஒரு தமிழ் நிறுவனம் சாதித்திருப்பது நாம் எல்லோரும் பெருமை படக்கூடிய விசயமே...

கடந்த முப்பது வருடங்களாக தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வெளிநாட்டில் குறிப்பாக அமீரகத்தில் ' ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை?! (வரி உபயம்:அண்ணாச்சி) என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில், இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.
அனுப்பியவர் : கரிசை. ஹைதர். துபை
நன்றி: சாருகேசி

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

ஒடுக்கப்பட்டவன் ஏன் உரிமையைத் தேடி மதம் மாறுகிறான்? - தந்தைப் பெரியார்



ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்! -
(பெரியார் சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931)


நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது
என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும்.
இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது.
இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.
ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

கட்டியவனை இழந்தால், கைகொட்டி இழிபேசும் சமுதாயம்..!!

சமுதாயத்தில் இருக்கும் மூடபழக்கவழக்கங்களிலேயே மிகவும் கொடுமையானது கணவனை இழந்தவள் நிலைதான்.. ஆம் ஒன்றா இரண்டா..ஒடுக்குமுறைகள்..!. கணவனின் இறப்புக்கு காரணம் அவளா..?. பின்னே ஏன் முடக்கிவைக்கப்படுகிறாள் மூலையிலே..? பெற்ற பிள்ளையின் திருமணத்தில் கூட பின்னால் இருந்து தானே வாழ்த்துகிறாள்..! தடைக் கல்லை உடைத்துக்கொண்டு சபைக்கு வருவது எப்போது..?. துருப்பிடித்த பழக்க வழக்கங்களை தூக்கியெறிந்து விட்டு நவீன சமுதாயம் படைத்தால்..??.இவர்களின் மனவேதனையை கொஞ்சமாவது மாற்றலாம் அல்லவா..!!.

கைம்பெண்னின் கதறல்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பொட்டிழந்தேன், பூவிழந்தேன்,
புருசனை இழந்தற்காக..!
இழந்து இருட்டிலே வாழ்வதை விட,
அக்கால பெண்கள் போல்,
உடன்கட்டை ஏற உள்ளம் துடிக்கிறது,
கணவனை இழந்தவள் கைம்பெண்னாம்..!
வீதியில் உலாவந்தாள்,
விந்தயாய் சாடுகின்றனர்.!!
நல்ல காரியங்கள் நான்முன்னின்றாள்,
நடந்தேறாது என்கிறார்கள்.?
கட்டியவனை இழந்து ,
கதறும் உள்ளத்தை,
கத்தியால் குத்துகிறார்களே..!!
இது நியாயமா...?,
என் போன்ற கோடி பெண்களின்,
குமுறலைப் போக்க,
விதவையை வீட்டில் பூட்டி வைக்கும்,
மூடத்தனதை நீக்க,
வாலிபனே..முன் வரமாட்டாயா....??
பரவாயில்லை,
பரவாயில்லை..
வயோதிகனே..!!
நீயாவது - என்னை,
வாழ்கைத் துணைவியாக,
ஏற்றுக்கொள்வாயா..??
உன் மீதி வாழ்கையின்
ஊன்றுகோலாக - நான்..
இருந்துவிட்டுப் போகிறேன்....!
..............................................................
ஆக்கம் : "கவி" ஹக்

திங்கள், 6 ஏப்ரல், 2009

மலேஷிய தலைமைத்துவத்தில் "RAHMAN" பார்முலா..??


மலேஷியா 1957 ஆகஸ்ட் 31 ல் சுதந்திரம் வாங்கியவுடன் முதல் பிரதமராக பொருப்பேற்றுக்கொண்டவர். துங்கு. அப்துற் ரஹ்மான் இவர் இந்நாட்டின் தந்தை என போற்றப்படக்கூடியவர். இவர் 31 ஆகஸ்ட் 1957 முதல் 22 செப்டம்பர் 1970 வரை 13 வருடங்கள் ஆட்சி செய்தார்.



நாட்டின் இரண்டாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் துன். அப்துற் ரசாக். இவர் நாட்டின் விவசாய வளர்ச்சில் முக்கிய பங்காற்றியவர். இவர் 22செப்டம்பர் 1970ல் இருந்து 14 ஜனவரி 1976 வரை ஆறுவருட ஆட்சிசெய்தார்.




நாட்டின் மூன்றாவது பிரதமர். துன். ஹுசைன் ஓன் இவர் 14 ஜனவரி 1976 முதல் 16 ஜூலை 1981 வரை ஆட்சி செய்தார்.





நாட்டின் நான்காவது பிரதமர் .டாக்டர். துன் . மகாதிர் முகமது. விவசாய நாடான மலேஷியாவை தொழில்வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றியவர். சிங்கப்பூரை மட்டுமே தெரிந்து வைத்திருந்த உலக நாடுகளுக்கு கோலாலம்பூரைத் தலைநகரமாக கொண்ட மலேஷியாவை உயர்த்திக்காட்டியவர். "நவீன மலேஷியாவின் சிற்பி" என்றும் போற்றப்படக்கூடியவர். இந்திய வம்சாவளியில் வந்தவரான இவர் 16 ஜூலை 1981 முதல் 31 அக்டோபர் 2003 வரை 22 ஆண்டுகள் நல்லாட்ச்சி நடத்தினார். இப்போதும் மூத்த ஆலோசகராக நாட்டிற்க்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சேவையாற்றி வருகிறார்.



ஐந்தாவது பிரதமர் டத்தோ ஸ்ரீ. அப்துல்லா அஹ்மத் படாவி. இவர் மகாதிர் பதவி விலகிய 31 அக்டோபர் 2003 முதல் 2 ஏப்ரல் 2009 வரை ஆட்சி செய்தார்



நாட்டின் ஆறாவது பிரதமராக. டத்தோ ஸ்ரீ. நஜீப் ரசாக் அவர்கள் ஏப்ரல் 3 ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இவர் நாட்டின் இரண்டாவது பிரதமர் அப்துற் ரசாக்கின் மகனாவார். பாராளுமன்றத்திலே ரானுவம், மற்றும் நிதியமச்சராக சிறப்பாக பனியாற்றியவர். இவரும் நல்லாட்சி தருவார் என நம்புகிறோம்.


இப்போது தலைப்புக்கு வருவோம்.


1). ABDUL RAHMAN,

2)......... ABDUL RASAAK,

3) .........HUSSEIN ONN,

4)..........MAHATHIR BIN MUHAMAD

5)..........ABDULLAH AHMAD BADAWI

6)...........NAJIB RASAK,

இது தான் சீக்ரெட்...!! " RAHMAN" பார்முலா..

செவ்வாய், 31 மார்ச், 2009

இஸ்லாத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் பிர் அவ்னின் உடல்..!

இந்த வீடியோ கூறூம் உன்மைகளை நீங்களும் பாருங்கள்..!!

சாமான்ய மக்களை சந்திக்கு வரவழைத்த துபாயின் மேற்க்கத்திய கலாச்சாரம்..!

வளைகுடா கடற்கரையோரம், துபாய் நகரை பார்த்த படி நிற்கிறது "பெர்ஜ் அல் அரப்" என்று அழைக்கப் படும், பாய்மரக்கப்பல் வடிவில் கட்டப்பட்ட, ஏழு நட்சத்திர ஹோட்டல். ஆமாம், எதையும் பெரிதாகவே சிந்தித்து கட்டப்பட்ட, ஐந்து நட்சத்திரத்தை விட வசதிகள் நிறைந்த ஏழு நட்சத்திர விடுதி அது. அதன் மிகக்குறைந்த அறையின் ஒரு நாள் வாடகை 800 டாலர்கள். துபாய் காரருக்கு எல்லாத்தையும் வித்தியாசமாக செய்ய ஆசை. அதனால், ஹோட்டல் விளம்பரத்துக்காக அமெரிக்காவின் டென்னிஸ் நட்சத்திரம் அன்ரே அகசியை அழைத்து வந்து, உச்சியில் இருக்கும் ஹெலி இறங்கு தளத்தில் டென்னிஸ் விளையாட வைத்தார்கள்.

துபாய் நாட்டின் சின்னமாகி விட்ட பெர்ஜ் அல் அரப்கட்டியதுடன் நின்று விடாது, நவீன உலக அதிசயங்கள் அமைக்க வேண்டுமென்ற ஆசையில், கடலுக்குள் பனை மர வடிவில், உலகப் பட வடிவில், என்று செயற்கை தீவுகளை வேறு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த செயற்கை தீவுகளில், நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புக்களை கட்டி ரியல் எஸ்டேட் இல் விற்க இருக்கிறார்கள்.

துபாய் முதலாளிகளுக்கு எண்ணை விற்று வந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வதென்ற கவலை. அதனால் இப்படி பிரமாண்டமான கட்டுமானப் பணிகளை கற்பனை பண்ணி கட்டி கொண்டிருக்கிறார்கள். பணம் உள்ளவர்களின் வாழ்கை வசதிகளை உயர்த்துவதை மட்டுமே குறிக் கோளாக கொண்டு செயற்படும் அரசாங்கம், சாதாரண மக்களுக்காக போக்குவரத்து துறையை விருத்தி செய்யவில்லை. அதை விட கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும், நவீன உலக அதிசயங்களை கட்டிய, கட்டிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் மாத வருமானம் 160 டாலர்களுக்கு மேல் போவதில்லை. மேலும் குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, கட்டிடங்கள் விழுந்து மடிந்தவர்கள் பலர். இந்திய, பாகிஸ்தானிய கூலி தொழிலாளர்களன அவர்களை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.. அவர்களின் பெறுமதி சில நூறு டாலர்கள் மட்டுமே. இருபதாம் நூற்றாண்டு நவீன அடிமைகள் அவர்கள்.
2005 ஜனவரி மாதம், ஹஜ் பெருநாள் தொடங்க சில நாட்களே இருந்த காலம். மெக்கா போகும் யாத்திரீகர்கள் எனது விமானத்திலும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஏன் துபாய் வரவேண்டும்? பேச்சு கொடுத்ததில் சில உண்மைகள் வெளி வந்தன. கனடாவில் இருந்து புறப்பட்ட அந்த யாத்திரீகர்கள், ஒரு சவூதி அராபிய பிரயான முகவர் மூலம் ஒழுங்கு செய்யப் பட்டவர்கள். ஒவ்வொரு பயணியிடமும் நிறைய பணம் வாங்கி கொண்டு, குறைந்த செலவில் டிக்கெட் எடுத்து நாடு நாடக சுற்றி போகும் படி வைத்திருந்தார்கள். பாவம் இந்த அப்பாவி யாத்திரீகர்கள், தாமாகவே பிரயாணம் ஒழுங்கு பண்ண அவர்களுக்கு உரிமையில்லை. சவூதி பிரயான முகவர்களின் ஏகபோக உரிமை மதம் சம்பந்தமான புனித பயணத்தில் கோடி கட்டிப் பறக்கிறது. துபாய் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, பாஸ்போர்டை வைத்து பிரயாணிகளை பிரித்து விசா குத்திக் கொண்டிருந்தார்கள். ஐக்கிய அரபு ராச்சியங்கள், மற்றும் பணக்கார வளைகுடா நாடுகளின் பிரசைகளுக்கு முன்னுரிமை, அதற்கு அடுத்ததாக அமெரிக்க அல்லது பிற பணக்கார நாடுகள், கடைசியாக வறிய நாடுகளை சேர்ந்த அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த பாகுபாடு துபாய் அங்கம் வகிக்கும் ஐக்கிய அரபு எமிறேடின் நிர்வாக அரசியல். அங்கே நீதி கூட இந்த பின்னணியை வைத்து தான் வழங்கப் படுகின்றது.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது, அப்போது ஜனவரி மாதம் என்பதால் வெயில் கடுமையில்லை. சற்றே குளிரான காலநிலை. ஊர் சுற்றிகளுக்கு ஏற்ற காலநிலை. அங்கே பொது போக்குவரத்து அரிது. அதனால் டாக்ஸி, அல்லது தனியார் வாகனம் மட்டுமே தஞ்சம். நான் போய் நின்ற இடம் பழைய துபாய் நகரம். பஜார் நகரம் என்றும் சொல்லலாம். நகை கடைகள், பல சரக்கு கடைகள், மலிவான தங்குவிடுதிகள், எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள்.... இப்படி துபையின் அந்த பகுதி மட்டும் ஒரு சராசரி இந்திய நகரம் மாதிரி காட்சியத்தது. அங்கிருந்து ஒரு சில கி.மி. தூரம் போனால் தான் நவீன துபாய் நகரம் ஆரம்பிக்கிறது. அமாம், துபாய் நகரம் இன்னமும் புது புது குடியிருப்புகள் அமைக்கப் பட்டு பெருகிக் கொண்டே போகின்றது. பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய அல்லது (எமிரேட்) அரேபியர்கள் மட்டுமே வசிக்கும் நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புகள், அவற்றின் மத்தியில் பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை கொண்ட நியூ யார்க் போன்ற நவீன நகரங்கள்அவை. நட்சத்திர ஹோட்டல்கள், உல்லாச பிரயாணிகள் இளைப்பாறும் கடற்கரை, இப்போது கட்டப் பட்டுகொண்டிருக்கும் உலக அதிசயங்கள் எல்லாமே அங்கே தான்.
இந்த நகரமயமாக்கப் பட்ட கட்டடக் காட்டுக்கு வெளியே, பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கிறது நவீன அடிமைகளின் முகாம்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தென் ஆசிய நாட்டு கூலி உழைப்பாளிகள், மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். தொழில் ஒப்பந்தம் தொடங்கும் நாளன்றே அவர்களின் கடவுச்சீட்டு, சட்டத்திற்கு மாறாக, வாங்கி வைக்கப் படுகின்றது. குறைந்தளவு வசதிகளை கொண்ட முகாம்களில், ஒரு அறைக்குள் எட்டுபேர் என்று தங்க வைக்கப் படுகின்றனர். வேலை செய்யும் இடத்திற்கு தினம்தோறும் கம்பெனி பஸ், தொழிலாளரை ஏற்றி இறக்கும். ஒரு தொழிலாளிக்கு சம்பளம் உட்பட ஆகும் செலவு அதிக பட்சம் முன்னூறு டாலர்கள் மட்டுமே என்பதால், அவர்களின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், பல கம்பெனிகள் பெருமளவு லாபம் எடுக்கின்றன. மலிவான உழைப்பாளிகள் உருவாக்கும் உற்பத்தி பொருட்கள், அல்லது சேவைகள் ஆகியவற்றின் விலைகள் சர்வதேச தரத்திற்கு உயர்வாக இருப்பதால், இந்த கொள்ளை லாபம் சாத்தியமாகின்றது. உண்மையில் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய முதலாளிகள், பொறாமைப்படும் அளவிற்கு துபாய் பொருளாதாரம் அடிமைகளால் கட்டப்பட்டு வருகின்றது. அங்கே தொழிலாளர் நல சட்டங்கள் எதுவும் கிடையாது. தொழிற்சங்கங்களுக்கு தடை. வேலை நிறுத்தம் சட்டவிரோதம். வர்த்தக நிறுவனங்கள் வருமான வரி கட்ட தேவையில்லை. மொத்தத்தில் அது ஒரு முதலாளிகளின் சொர்க்கம்.
கூலி தொழிலாளர்கள் மட்டுமல்ல, விற்பனையாளர்கள், எழுதுவினைஞர்கள், மானேஜர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் போன்ற சேவைத்துறையில் இருப்போரும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு கூட்டி வரப்படுகின்றனர். இவர்களின் சம்பளம் சாதாரண வெளிநாட்டு தொழிலாளி எடுப்பதை விட பல மடங்கு அதிகம் என்றாலும், ஒரு சாதரண எமிரேட் தொழிலாளி எடுக்கும் சம்பளத்தை விட குறைவு. சில நேரம் அலுவலக பணியில் இருக்கும் ஐரோப்பியரை விட குறைவு எனலாம். அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மேல்நிலை மனேஜர்களாக பதவியில் உள்ளனர். அவர்களின் ஊதியம், அவர்களின் தாயகத்தில் கிடைக்கும் அதே அளவு, அல்லது சற்று கூட. இதனால் சில தகுதி குறைந்த அமெரிக்க அல்லது ஐரோப்பியர்கள் கூட துபாயில் செல்வந்த வாழ்கை வாழ்கின்றனர்.
பண்டைய ரோம் நகரத்தில், விவசாய கூலிகள் முதல் ஆசிரியர்கள் வரை பிற நாடுகளில் இருந்து வந்த அடிமைகளே வேலை செய்தனராம். ரோம் மக்கள் அரசு துறைகளிலும், இராணுவத்திலும் மட்டுமே பணி புரிந்தனராம். இதே போன்ற சமூக கட்டுமானம் எமிரேட் முழுக்க உள்ளது. நாட்டின் பிரசைகள் அரசாங்கத்திலும், பாதுகாப்பு படை களிலும் அதிக ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். மேலும் எல்லா வகையான வர்த்தக நிறுவனத்திலும் ஒரு எமிரேட் பிரசைக்கு அரைவாசி பங்கு இருக்க வேண்டும். இதனால் பல எமிரேட் பிரசைகள், சும்மா இருந்தே பணம் சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரும் முதலீட்டில் நடத்தப் படும் கம்பெனிகள் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பிய முதலளிகளுடயது. இடைதர மற்றும் சிறிய கம்பெனிகளை இந்தியர்கள் நடத்துகின்றனர். வெளிநாட்டினர் துபாயில் எந்த சொத்தும் வாங்க உரிமையில்லை. அவர்கள் வீடு வாங்க, வியாபார நோக்குடன் அனுமதித்தாலும், ஒரு சில கட்டுப்பாடுகளுடன், அவற்றை விற்கும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் அல்லது எமிரேட் காரர்கள் லாபம் சம்பாதிக்கும் துறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எண்ணை இருப்பு குறைந்து வருவதால் இது போன்ற வர்த்தகத்தில் துபாய் நாட்டம் காட்டி வருகின்றது. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்க கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருப்பதால், துபாயில் பல உலக வர்த்தக கழகங்கள் தமது விற்பனை சாலைகள், போன்றவற்றை திறந்து வைத்துள்ளன. மேலும் வரி சலுகை, சகல வசதிகளுடனான விமான நிலையம், துறைமுகம், குறைந்த கூலிக்கு பிடிக்க கூடிய தொழிலாளர்கள், ஆகிய விஷயங்கள் பல முதலாளிகள் துபாயை தெரிவு செய்ய காரணம்.
துபாய் இவ்வாறு முதலாளிகளின் சொர்க்கபுரி மட்டுமல்ல, உல்லாச பிரயாணிகளுக்கும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. துபாய் அருங்ககாட்சியகம் குறிப்பிடத்தக்கது. எண்ணை கண்டுபிடிக்கும் வரை துபாய் நகரம் எப்படி காட்சியளித்தது? அதன் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? போன்றவற்றை அறிய விரும்பினால் அது ஏற்ற இடம். மேலும் துபாய் வணிகர்கள் ஒரு காலத்தில் முத்துகளை உலகம் முழுக்க விற்று வந்தனர். முத்து குளிக்கும் முறை, பற்றி ஒரு பகுதி விளக்குகிறது. இன்னொரு பகுதி பாலை வன சோலையில் பேரீச்சை, பிற விவசாயம் பற்றி விளக்குகின்றது. இவை எல்லாம் நேரே பார்ப்பது போல பொம்மைகளை வைத்து காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் பார்ப்பதை விட்டு, பாலைவன கிராமம் ஒன்றினை அங்கிருந்த வீடுகள், கிணறுகள், தோட்டங்கள், ஒட்டகங்கள்இவ்வாறு அப்படியே இருந்த மாதிரி பார்க்க விரும்பினால், "ஹட்டா ஹெரிடேஜ் வில்லேஜ்" சிறந்த இடம். ஹட்டா துபாய் நகரில் இருந்து 115 கி.மி. கிழக்கு பக்கமாக இன்னொரு எமிரேட் புஜைரா நோக்கி போகும் பாதையில்,ஹசார் மலைகளுக்கு நடுவில் அமைந்திள்ளது. மலைகளின் பின்னணியில் அந்தக் கிராமத்தின் அமைவிடம் அதன் அழகை மெருகூட்டுகின்றது. ஹட்டாவில் தான் எமிரேட்டின் மிகப்பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் பிற பாலைவன வளைகுடா நாடுகளை போலன்றி, எமிரேட்கிழக்கு பகுதியில் விவசாயம் நடக்கிறது. அதற்கு நீர்பாசன வசதி இந்த அணை மூலம் கிடைக்கிறது.

ஐக்கிய அரபு இராச்சியங்கள் ஏழு எமிரேட்களை சேர்த்து உருவானது. அந்த ஏழும் சில சுயநிர்ணய உரிமைகளுடன் ஒன்றிணைந்து ஒரே தேசமாக இயங்குகின்றன. ஒவ்வொரு எமிரேட்டுக்கும் ஒரு ஷேக் அரசியல்/நிர்வாக தலைவராக உள்ளார். ஷேக் என்பது மன்னரை குறிப்பதல்ல. பண்டைய இஸ்லாமிய அரசியல் அமைப்பின் படி ஒவ்வொரு பிரதேசத்திற்கும், ஷேக் என்ற ஒருவர் நிர்வாகத் தலைவராக தெரிவு செய்யப் பட்டு, அரசியல் நிர்வாக அதிகாரம் வழங்கப் பட்டது. ஐரோப்பியரின் வருகைக்கு பிறகு, அதுவும் எண்ணை வளம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு தான் இந்த ஷேக்குகள் எல்லாம் கோடீஸ்வரர்களாக, குறுநில மன்னர்கள் போல மாறினார்கள். அபுதாபி, அதிக வருவாய் கொண்டதால், அது தலைநகரம் ஆகி விட்டது. அபுதாபி ஷேக், காலம் சென்ற சையிது, தேசத் தந்தை போலே ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளார். அவரது ஆளுயர உருவப் படங்கள் எமிரேட் எங்கும் காணலாம். அது மட்டுமல்ல, அவருக்கு சொந்தமான பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட ஆடம்பர மாளிகைகள், ஒவ்வொரு நகரிலும் உள்ளது. இராக்கில் சதாம் உருவப்படங்களை, மாளிகைகளை, கேலி செய்த சி.என்.என். போன்ற மேற்கத்தைய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாதது வியப்புக்குரியது. அபுதாபி, துபாய் மட்டுமே எண்ணை வளம் காரணமாக, பணக்கார எமிரேட்களாக உள்ளன. அவை புஜைரா போன்ற எண்ணை இல்லாத "வறிய" எமிரேட்டுகளுக்கு நிதி உதவி செய்து முன்னேற்றி வருகின்றன. சட்டங்கள் கூட ஒவ்வொரு எமிரேட்டுக்கும் மாறுபடும். துபாய் மேலைத்தேய நாடுகளை போல தாராளவாத கொள்கையை கடைபிடிகின்றது. அங்கே இரவு களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள், ஏன் விபசாரத்துக்கு கூட சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது. துபாய் அருகிலேயே இருக்கும் ஷார்ஜா என்ற இன்னொரு எமிரேட் இதற்கு மாறாக, மத ஒழுக்க கட்டுபாடுகளை கடுமையாக கடைப் பிடிக்கின்றது. அங்கே மதுபானம் போன்றனவற்றிகு முற்றாக தடை. அபுதாபி ஓரளவு சுதந்திரமும், ஓரளவு கட்டுபாடுகளையும் கொண்டுள்ளது. இதனால் உல்லாச பிரயாணிகளையும், வர்த்தக நோக்கோடு வருபவர்களையும் துபாய் மட்டுமே கவர்வது வியப்புக்குரியதல்ல.
நன்றி: "கலையகம்" கலையரசன்

வெள்ளி, 27 மார்ச், 2009

விளக்கனைத்து புது யுகம் படைப்போம்.


உலக இயற்கை நிதியத்தின் சார்பி்ல ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை(28.03.2009) நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த பூமி நேரம் (Earth Hour) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது உலக இயற்கை நிதியம்.
இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும்.புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது.
2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர்.
உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓரா ஹவுஸ், ரோம் நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.
இந்த ஆண்டு பூமி நேரம், வருகிற சனிக்கிழமை (28ம் தேதி) இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை 1000 நகரங்களைச் சேர்ந்த 100 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதோ நம்மால் முடிந்தது பூமிக்கு நன்மை செய்யவிட்டலும் தீமை செய்யாமலாவது இருப்போம்..!.