திங்கள், 6 ஏப்ரல், 2009

மலேஷிய தலைமைத்துவத்தில் "RAHMAN" பார்முலா..??


மலேஷியா 1957 ஆகஸ்ட் 31 ல் சுதந்திரம் வாங்கியவுடன் முதல் பிரதமராக பொருப்பேற்றுக்கொண்டவர். துங்கு. அப்துற் ரஹ்மான் இவர் இந்நாட்டின் தந்தை என போற்றப்படக்கூடியவர். இவர் 31 ஆகஸ்ட் 1957 முதல் 22 செப்டம்பர் 1970 வரை 13 வருடங்கள் ஆட்சி செய்தார்.



நாட்டின் இரண்டாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் துன். அப்துற் ரசாக். இவர் நாட்டின் விவசாய வளர்ச்சில் முக்கிய பங்காற்றியவர். இவர் 22செப்டம்பர் 1970ல் இருந்து 14 ஜனவரி 1976 வரை ஆறுவருட ஆட்சிசெய்தார்.




நாட்டின் மூன்றாவது பிரதமர். துன். ஹுசைன் ஓன் இவர் 14 ஜனவரி 1976 முதல் 16 ஜூலை 1981 வரை ஆட்சி செய்தார்.





நாட்டின் நான்காவது பிரதமர் .டாக்டர். துன் . மகாதிர் முகமது. விவசாய நாடான மலேஷியாவை தொழில்வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றியவர். சிங்கப்பூரை மட்டுமே தெரிந்து வைத்திருந்த உலக நாடுகளுக்கு கோலாலம்பூரைத் தலைநகரமாக கொண்ட மலேஷியாவை உயர்த்திக்காட்டியவர். "நவீன மலேஷியாவின் சிற்பி" என்றும் போற்றப்படக்கூடியவர். இந்திய வம்சாவளியில் வந்தவரான இவர் 16 ஜூலை 1981 முதல் 31 அக்டோபர் 2003 வரை 22 ஆண்டுகள் நல்லாட்ச்சி நடத்தினார். இப்போதும் மூத்த ஆலோசகராக நாட்டிற்க்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சேவையாற்றி வருகிறார்.



ஐந்தாவது பிரதமர் டத்தோ ஸ்ரீ. அப்துல்லா அஹ்மத் படாவி. இவர் மகாதிர் பதவி விலகிய 31 அக்டோபர் 2003 முதல் 2 ஏப்ரல் 2009 வரை ஆட்சி செய்தார்



நாட்டின் ஆறாவது பிரதமராக. டத்தோ ஸ்ரீ. நஜீப் ரசாக் அவர்கள் ஏப்ரல் 3 ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இவர் நாட்டின் இரண்டாவது பிரதமர் அப்துற் ரசாக்கின் மகனாவார். பாராளுமன்றத்திலே ரானுவம், மற்றும் நிதியமச்சராக சிறப்பாக பனியாற்றியவர். இவரும் நல்லாட்சி தருவார் என நம்புகிறோம்.


இப்போது தலைப்புக்கு வருவோம்.


1). ABDUL RAHMAN,

2)......... ABDUL RASAAK,

3) .........HUSSEIN ONN,

4)..........MAHATHIR BIN MUHAMAD

5)..........ABDULLAH AHMAD BADAWI

6)...........NAJIB RASAK,

இது தான் சீக்ரெட்...!! " RAHMAN" பார்முலா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக