வெள்ளி, 10 ஏப்ரல், 2009

கட்டியவனை இழந்தால், கைகொட்டி இழிபேசும் சமுதாயம்..!!

சமுதாயத்தில் இருக்கும் மூடபழக்கவழக்கங்களிலேயே மிகவும் கொடுமையானது கணவனை இழந்தவள் நிலைதான்.. ஆம் ஒன்றா இரண்டா..ஒடுக்குமுறைகள்..!. கணவனின் இறப்புக்கு காரணம் அவளா..?. பின்னே ஏன் முடக்கிவைக்கப்படுகிறாள் மூலையிலே..? பெற்ற பிள்ளையின் திருமணத்தில் கூட பின்னால் இருந்து தானே வாழ்த்துகிறாள்..! தடைக் கல்லை உடைத்துக்கொண்டு சபைக்கு வருவது எப்போது..?. துருப்பிடித்த பழக்க வழக்கங்களை தூக்கியெறிந்து விட்டு நவீன சமுதாயம் படைத்தால்..??.இவர்களின் மனவேதனையை கொஞ்சமாவது மாற்றலாம் அல்லவா..!!.

கைம்பெண்னின் கதறல்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பொட்டிழந்தேன், பூவிழந்தேன்,
புருசனை இழந்தற்காக..!
இழந்து இருட்டிலே வாழ்வதை விட,
அக்கால பெண்கள் போல்,
உடன்கட்டை ஏற உள்ளம் துடிக்கிறது,
கணவனை இழந்தவள் கைம்பெண்னாம்..!
வீதியில் உலாவந்தாள்,
விந்தயாய் சாடுகின்றனர்.!!
நல்ல காரியங்கள் நான்முன்னின்றாள்,
நடந்தேறாது என்கிறார்கள்.?
கட்டியவனை இழந்து ,
கதறும் உள்ளத்தை,
கத்தியால் குத்துகிறார்களே..!!
இது நியாயமா...?,
என் போன்ற கோடி பெண்களின்,
குமுறலைப் போக்க,
விதவையை வீட்டில் பூட்டி வைக்கும்,
மூடத்தனதை நீக்க,
வாலிபனே..முன் வரமாட்டாயா....??
பரவாயில்லை,
பரவாயில்லை..
வயோதிகனே..!!
நீயாவது - என்னை,
வாழ்கைத் துணைவியாக,
ஏற்றுக்கொள்வாயா..??
உன் மீதி வாழ்கையின்
ஊன்றுகோலாக - நான்..
இருந்துவிட்டுப் போகிறேன்....!
..............................................................
ஆக்கம் : "கவி" ஹக்

1 கருத்து:

  1. பாட்ஷா...... வாவ் மாப்பிள்லை அசத்திவிட்டார் என் வாழ்த்துக்கள் ........... HஆHஹ்ஹ்ஹ்

    பதிலளிநீக்கு