புதன், 3 ஜூன், 2020

ஆரம்ப சுகாதார மையத்தின் அவலநிலை

#கர்ப்பிணிகளின்_உயிருடன்_விளையாடும்_ஆரம்ப


_சுகாதார_நிலையம்.

தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அழகியநாகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு அரசால் வழங்கப்படும்  ஊட்டச்சத்து பெட்டகம் பலருக்கு வழங்கப்படுவதில்லை, ஏன் எங்களுக்கு வழங்குவதில்லை நாங்கள் இங்குதான் மருத்துவம் பார்க்கிறோம், என்று அரசின் சழுகைகளைக்கூறி கேட்பவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குகிறார்கள், இது சம்பந்தமான  சிஎம் செல்லுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது,

அப்படி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வழங்கப்பட்ட ஊட்டச்சத்துப் பெட்டகத்தில் உள்ள பேரீத்தம்பழம், மற்றும் நெய் ஆகியவை தேதி காலாவதியாகியுள்ளது.
படித்த விபரம் உள்ளவர்கள் தேதியை பார்த்து சாப்பிடாமல் ஒதுக்கிவிட்டார்கள், இதே படிக்காத பாமரமக்கள் இதை வாங்கி சாப்பிட்டு இருந்தால் கர்ப்பிணிக்கும், வயிற்றில் வளரும் சிசுவுக்கும் ஆபத்தாக முடியாதா….?

கர்ப்பிணிகளின் உயிரோடு விளையாடும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அலட்சியப்போக்கை நாம் மேலதிகாரிகளிடம் புகார் செய்து பொருப்புடன் நடந்துகொள்ள வலியுறுத்தவேண்டும்.

#அரசினர்_சுகாதார_நிலையம்_கழிப்பறை_அவலநிலை_பற்றிய_முந்தைய_பதிவு 👇👇👇

https://m.facebook.com/story.php?story_fbid=181665039923988&id=109812723775887

#ஆரம்ப_சுகாதார_நிலையம்_அழகியநாயகிபுரம்

புதன், 6 மே, 2020

திரைகடல் சென்றவன் திக்கற்றவனா...?

வேலை இல்லாமலும் கொரொனா பீதியிலும் குடுபத்தை விட்டு பிரிந்து நாட்டின் அன்னியச்செலவானியை உயர்த்திய மக்களை மீட்டுவரப்போகும் ஆபத்தாண்டவனாக இருக்கவேண்டிய ஒரு அரசு. அவர்களை மீட்டுவர விலை பேசுகிறது.

தூதரகத்தில் பதிந்தால் அல்லது ஆன்லைனில் பதிந்தால் ஊர் சென்றுவிடலாம் என்று நம்பி இருந்தவர்கள் தலைகளில் இடியாய் இறங்கியது  இவர்களின் விலைப்பட்டியல்...  ரிங்கிட் 300 முதல் ரிங்கிட் 800 வரை மட்டுமே இருக்கும் மலேசிய விமான சேவைக்கான கட்டணமாக இவர்கள் நிர்ணயித்திருப்பது ரிங்கிட் 1800 (ஊர் மதிப்பில் ரூ.33,000) இது மக்களுக்கான அரசா...?