வியாழன், 26 பிப்ரவரி, 2009

அயல்நாட்டு வேலை (பாகம்-3)

எல்லோருடைய வாழ்கையிலும் இருபதைத் தாண்டியதும் ஏற்படும் இன்ப அதிர்ச்சி இவன் வாழ்கையிலும் ஏற்ப்பட்டது. அவனுக்கு வீட்டில் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது. " வெளிநாட்டு மாப்பிள்ளை, கை நிறைய சம்பாரிக்கிறார்" (கக்கூஸ் கழுவினாலும் கை நிறைய சம்பாரிக்கிறார்லல..). என்ற வெட்டி தம்பட்டத்தோடு வீடு வீடாக வடை, காப்பி சாப்பிட்டு வந்தார்கள். ஒருவழியாக இந்த அடிமைக்கும் ஒரு அடிமை மாட்டினாள். பேச வேண்டியதை பேசி மாற்றவேண்டியதை மாற்றி கல்யாணம் முடிவு செய்து அவனை ஊருக்கு வரச்சொன்னார்கள்.

ஆஹா...... அடிமை வாழ்க்கையின் அச்சானி முறிந்தது, விடியளைத் தேடி வென்புறா பறந்தது, என்று ஆனந்த கூத்தாடினான் அவன். ஆறு மாத சம்பளத்தை அப்படியே சேர்த்துவைத்து ஊருக்குப் போக ஜமான்கள் வாங்கினான் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து பொருட்களை வாங்கினான் குறை வரக்கூடாது என்பதற்காக...?. அவனுக்கும் தேவையான பொருள்களை வாங்கினான் (ஊரை ஏமாற்ற...?). பயணத்தை தொடங்கினான் பந்தங்களைக்காண ஆறத்தழுவி வரவேற்றார்கள் அவன் கொண்டுசென்ற பெட்டியை பார்த்தபடியே...?.

வெளிநாட்டில்இருந்து வருபவர்களின் வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களில்
பெட்டி பிறிப்பது என்பது முக்கியமானதாகும். சொந்தங்கள் சுற்றியிருக்க
பெட்டியை பிரித்து ஒனக்கு எனக்கு என எடுத்துக்கொள்வார்கள். அவ்வாறே அவனும் பிரித்தான். இந்தாங்க....... அம்மாவுக்கு கைலி, தாவனி, ஒடிக்களம்,
கோடாலிசாப் தைலம், அக்காவுக்கு சேலை, வாட்ச், லக்ஸ் சோப்பு,
டார்லி பவ்டர், இப்படி ஒவ்வொருவருக்கும் பகுந்து கொடுத்தும் குறை வந்தது. பத்துநாட்களுக்குள் பத்திரிக்கை அடித்து கல்யாணமும் வைத்தார்கள்.
தேன் நிலவு தெவிட்டாத இன்பம் இப்படியாக ஆறுமாத காலம் அரைநொடியாய் கறைந்தது. மனைவி போட்டுட்டு வந்த நகைகளும் வங்கியில் பாடம் படித்தது. "பழைய கிழவி கதவை தொரடி" என்பது போல் அடிமை வாழ்க்கை அவனை விடாது துறத்தியது. புறப்பட்டன் புறமுதுகிட்டு
ஐந்தாறு மாதங்கள் அணலாய் தாக்கியது. அவனுக்கு குழந்தையும் பிறந்தது. தாங்கமுடியா சந்தோசம். தான் பெற்ற பிள்ளையை காணத்துடித்தது அவன் மனம். புறப்பட என்னினான் ஆனால் வரும்போது வங்கியில் வைத்த நகை...? வேகத்தடையாய் நின்றது.

நினைத்து நினைத்து வருந்தினான் அவன், "ஊரிலேயே பிழைப்பை தேடியிருக்கலாமோ..?, சொந்தபந்தங்களோடு சொகமா வாழ்ந்து இருக்கலாமோ..?". அவன் மனமே அவனை குத்திக்குடைந்தது. "ஊரில் கூலிவேலை செய்பவன்கூட குடும்பத்தோட இருக்கானே" எனக்கு மட்டும் ஏன்..ஏன்...? இந்த பொலப்பு..? புலம்பி புலம்பி உலகை வெருத்தவன் போல் உலருகிறான் இங்கே.............!!

வெருப்பாத்தான் இருக்கு _ சில நேரம்,
வேம்பைக் கடிச்சதுபோல்,
கசப்பாத்தான் இருக்கு..!,
"ஆணி' காலனி போட்டுதான்,
ஆகாரம் தேடவேண்டுமோ..?,
கூனிக் குருகியபிறகுதான்,
குடும்பத்தைக் காணமுடியுமோ..?,
தேனீக்கள் பலலட்சம்,
தேடிவந்து கொட்டியது போல்,
தேகமெல்லாம் கடுக்குதப்பா..!!,
என்ன பொலப்பு இது..?,
எவன் கத்துக் கொடுத்தது இது..??,
எங்கே போய் சொல்லுற்து..,
நமக்கு பொறந்த புள்ள,
கருப்பா..?, சிவப்பான்னு..??,
கேவலம்..!
கோனிக்காவும், கோடாக்கும்,
சொல்லித்தான் தெரியனுமா..!?,
ஆருயிர் மனைவிகூட,
ஐ எஸ் டி கால் போட்டுதான்,
வாழனுமா...?
வேர பொலப்பு ஒன்னிருந்தா..?
விட்டிரலாம் இந்த பொலப்ப.,
ஊரு பொலப்பு ஒன்னு கெடச்சா..?
உருப்படியா வாழ்ந்திடலாம்...!.

குறிப்பு:- இது ஒரு விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட கதை. இதில் உள்ள உன்மை ஒவ்வொரு வெளிநாடு வாழ்நம்மவர்களுக்கும் தெரிந்திருக்கும்.
நானும் ஒரு வெளிநாடுவாழ் அடிமைதான். நாம் படும் கஷ்டம் நம் பிள்ளைகளும் பட வேண்டாம். உள்ளூரிலேயே படிக்கவைப்போம். எந்த வேலையாக இருந்தாலும் அது நம் நாட்டிலேயே என்ற உருதி கொள்வோம்.
நம் எண்ணம், குறிக்கோள், அனைத்தும் உள்நாட்டு வேலையையே நாடினால் அதற்க்கான முயற்சியும் செய்தால் இன்ஷா அல்லாஹ் நமக்கு பிந்தியசமுதாயம் அடிமை சங்கிலியை அருத்தெரிந்து புதிய சகாப்தம் படைக்கும்..........!!
முற்றும்....

என்றும் அன்புடன்... "கவி" ஹக்

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

அயல்நாட்டு வேலை (பாகம்-2)

அத்தனை வேலைப் பழுவிலும் கட்டிய பணத்திற்க்காகவாவது காலம் கடத்தவேண்டுமே..!, என்று புழுங்கிய அவனுக்கு முதல்மாத சம்பளகவர் ஆருதலாக இருந்தது. இந்த சந்தோசமான செய்தியை வீட்டிற்க்கு போன் செய்து சொல்வோம். என என்னியபோதுதான் ஞாபகம் வந்தது "அத்தா நீ நல்லபடியா சம்பாரிச்சி வாங்கிய முதல்மாத சம்பளத்தில் அல்லாஹ் பேரால கந்தூரி ஆக்கனும்னு நேந்துக்கிட்டேன்" என்று ஊரில் இருந்து புறப்படும்போது அவன் அம்மா கூறியது. உடனே பணத்தை அனுப்பிவைத்தான்.


இப்படி சம்பளம் வாங்குவதும் அனுப்புவதுமாகவே காலம் ஓடியது. விடுமுறை நாட்களில் ஊர்க்காரர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுவந்தான். அவர்களின் நிலை கண்ட இவன் மனம் " அடப் பாவிகளா நீங்க ஊருக்கு வந்தா வெள்ள வேட்டி சட்டைபாக்கெட்டில் சலவைத்தாள்கள் என்று பண்ணிய பந்தாவை பார்த்துதானடா எனக்கும் இந்த நிலமை" என்றது. அவர்கள் இவனைக் கண்டதும் தங்கள் பொலப்பு இப்படித்தான் என்று இயல்பை விளக்கினார்கள்.

கடிகாரமுள்ளைக் காலில் கட்டிக்கொண்டதுபோல் சுழன்று வந்த அவன். செக்கில் பூட்டிய மாடுபோல பகலிரவாய் பாடுபட்டான் பட்டகடனை அடைக்க, நாட்காட்டி பார்க்காமலேயே நகர்த்திவிட்டான் நாட்களை.......!!. ஊர் ஞாபகங்கள் தான் ஒளிநாடாவாய் ஓடியது. ஓடித்திறிந்த தெருக்கள், பாடித்திறிந்த வயல்வெளிகள், தாலாட்டிய தாய். இப்படி ஒவ்வொன்றாய் வந்துவந்து மறைந்தன. அன்றுதான் தெரியும் அவனுக்கு தான் அயல்நாடு வந்து ஆயிரம்நாட்கள் கடந்துவிட்டது என்று...!. முட்டியது அழுகை... கொட்டினான் மணக்குமுறளை............. இதோ..........



பத்து நூறு நாட்களை,

மெத்தனமா கடத்திவிட்டேன்,

மிச்ச நாளும்...!

சொச்ச பொழுதும்,

நட்டுவச்ச கல்லுபோல,

நகர மாட்டேங்குது..?,

அம்மாவின் நினைவுகள்தான்,

அடிமனதின் ஆழத்தில்,

ஆயுதமாய் குத்துகிறது..!!,


பாசத்தை மறந்துதான்,

பணத்தைத் தேடவேண்டுமோ..?,

குமுருகிறதொரு மனம்..!

அடேய்....,

பணமிருந்தால் தானடா,

பாசமுள்ள மனசும்,

சந்தோசமாக இருக்கமுடியும்.

என்று எச்சரிக்கிறது..!,

இன்னொறு மனம் - இப்படி,

மனங்களின் மல்யுத்தத்தினூடே,

பிறக்க ஒரு ஊர்..!

பிழைக்க ஒரு ஊர்..!! - என்ற,

நம்மவர்களின் தலையெழுத்தில்,

நான் மட்டுமென்ன..?

விதிவிலக்கா..! - என்று

என்னினேன்....

என்னை நானே தேற்றிக்கொண்டேன்..!!

தொடரும்.....

திங்கள், 23 பிப்ரவரி, 2009

அயல்நாட்டு வேலை (பாகம்-1)

+2 வை பாதியிலேயே நிறுத்திவிட்டான் அப்துல்லாஹ் (கற்பனைப்பெயர்). அன்று அவனது வீடே சொந்தங்களால் நிறைந்து இருந்தது..?. நேற்றே அவன் சொந்த பந்தங்களின் வீட்டுக்கெல்லாம் சென்று பயணம் சொல்லி வந்துவிட்டான். அப்போது எல்லோரும் அவனுக்கு குடிக்க பால் கொடுத்தார்கள் (வழக்கம் போல). நெருங்கிய உறவினர்கள் பணமும் வைத்துக்கொடுத்தார்கள் (மொடையாக இருக்கும் போது கேக்கலாம் என்றோ என்னவோ..?) .

அன்று முழுவதும் அவனுக்கு சாப்பாடும் ஏறவில்லை, தூக்கமும் வரவில்லை. வெளிநாடு எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டெ தனது கற்பணைக் குதிரையைத் தட்டிவிட்டான்.....!. 'பணம் மழையாக கொட்டுகிறது. இவன் பில்கேட்ஷின் பேரன்போல அதில் புறல்கிரான்..',. " மாப்ளே" , "மாப்ளே" கற்பனையை கலைக்கிறது ஒரு குறள். திரும்பிப்பார்த்தால் அவன் தாய் மாமு..?. இத்தனை நாளும் எட்டிபாற்காத மனுசன் அன்று அவிழ்த்து விட்டார் அட்வைசுகளை.... "மாப்ளே பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் பத்திரமா எடுத்து வச்சாச்சா, போய் இறங்கியதும் மாமுக்கு போன் போடுங்க, அங்க போய் நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கனும் யார் வம்புக்கும் போகப்புடாது". என்று அடுக்கிக்கொண்டே போனார். அவனுக்கு புரிந்தது அது அவர் மகளை கட்டிவைக்க போடும் அஸ்திவாரமென்று..!.

சொந்தங்கள் புடைசூழ பள்ளிவாசல் சென்று பேரிச்சம்பழம், கற்கண்டு வைத்து பாத்திஹா ஓதிவிட்டு ஆயத்தமாகிறான் அடிமை வாழ்க்கைக்கு..?. சிலர் முருக்கு, கடலைமிட்டாய், அல்வா, மிச்சர் என்று விதவிதமான தின்பண்டங்களை ஏற்கனவே அயல்நாடுவாழ் அடிமைகளுக்கு குடுத்தனுப்பினார்கள் (அப்பவாவது குடும்ப நெனப்பு வரட்டும் என்றோ..?). சொந்தங்களைப் பிரியும் சோகத்தில் அவனுக்கு அழுகை முட்டியது..!. சொந்தங்களும் கண்னைக் கசக்கியவற்களாக வழியனுப்பி வைத்தார்கள்......

படித்துக்கொண்டு இருந்த அவனுக்கு இது ஒரு புதிய அனுபவம் தான். அவன் தாய் நாட்டைத் துறந்து ஏரோப்பிலேனில் ஏறியது முதல் இறங்கும் வரை எதையோ இழந்தவன் போல் இருந்தான். வெளிநாடு என்றால் படுக்க வைத்து பணம் கொடுப்பார்கள் என்றே இதுநாள்வரை அவன் நினைத்திருந்தான்..! (பாவம் பணம் கொடுத்து ஏற்க்கும் அடிமைப் பதவி இது என்பதை அறியவில்லை போலும்). ஏர்போட்டில் இறங்கியதும் ஏஜண்ட் வந்து அழைத்துச்சென்று பூட்டிவிட்டான் இயந்திரத்தின் ரெக்கயிலே..... 1 நாள், 2 நாள், 3 நாள் வேலைக்குப் பிறகு.... உடலின் வலி அவனுக்கு உண்மையை கூறியது....


பள்ளிப் பருவத்திலேயே பாலாப்போன
வெளிநாட்டு மோகம்..!.
பகல் இரவாய் பசுமரத்து ஆணிபோல் பதிகிறது,
படிக்கும் வயதிலேயே பறக்க ஆசைப்படுகிறான்.
இதற்கு... உள்ளூரில் பிழைக்கத்தெரியாமல்
அயல்நாடு சென்று திரும்பும் நம்மவர்கள் செய்கின்ற
ஆடம்பரம் தான்..? அத்தனைக்கும் ஆரம்பம்..!. ஆம்,
அங்கே 6 க்கு 6 அறையினிலே நாலு பேரு தங்கிக்கிட்டு
நல்ல சாப்பாடு, நல்ல துணிமணி உடுத்தாமல்..
சேத்துவைத்த காசில் "கோல்டு வாட்சும் ,
மார்டின் சட்டையும் , ஒன்மேன் ஷோ செண்டும் ,
உதட்டருகே ரோத்மேன் சிகரெட்டும்".
மூன்று வருடம் உழைத்த காசை மூன்று மாதத்தில்..?
கரைத்துவிட்டு கப்பலேரிப் போவோரைத் தானே நாம்
ரோல் மாடலாக எடுத்துக்கொள்கிறோம்.
உள்ளூரில் உழைப்பதை நாம் ஏன் சிந்திப்பதில்லை..?,
வெளிநாடு சென்றால் ஜாலியாக இருக்கலாம்..!
கொட்டிக்கிடக்கும் காசுகளை கோனிப்பையில்
அள்ளிவிடலாம், என்ற அல்ப ஆசையினால் தானே..!.
அயல் நாட்டில் காலடி எடுத்துவைக்கும் ஒவ்வொரு
இளைஞனின் இதயத் துடிப்புதான் இங்கே.................


அழகிய ரோஜா என,

அள்ளிப் பறிக்க வந்தோமே.

அதனடியில் முட்கலென்று,

அறியாமல் போனோமே..!,

ஆனதினால் என் செய்வது..?,

ஆகாயம் கடந்துவிட்டோமே,


இயந்திர வாழ்க்கையடா இப்பூவில்.!,

இருப்பினும் பரவாயில்லை..?

இஸ்லாத்தின் இனியமணம்,

ஈற்க்கத்தான் செய்கிறது..!,


உறவுகளை மறந்தால்தானே,

ஊதியத்தைப் பார்க்க முடியும்.

எருதுகளுடன் பூட்டிய,

ஏறு போல...!

ஒத்து சென்றால்தானே,

ஓங்கி வளரமுடியும்..!


ம்ம்ம்ம்.......?

பூவடியில் முள்ளிருந்தாலும்,

பூ கொடுக்கும் தேனெடுக்க..?,

அயல்நாட்டு வண்டுகள்,

அதனருகே.....

மொய்க்கத்தான் செய்கிறது.....!!
...................................................................................
தொடரும்.........

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

"சிகரட்" பற்றி ஒரு "சீக்ரெட்"..!!

உலக நாடுகளே ஒழிக்க நினைக்கும் ஒரு பொருள்..!
வருடாவருடம் நிதிநிலை அறிக்கையில் வரி உயர்த்தப்படும் ஒரு பொருள்..!!
பள்ளிப் பருவத்திலேயே பலரின் விருப்பமான ஒரு பொருள்..!!!
ஆயிசு முடிந்து இறப்பவர்களைவிடவும்,
இதன் ஆவிபிடித்து இறப்பவர்கள் தான் அதிகமாம்..?
இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அனிகிறோம்.
காரில் செல்லும்போது சீட் பெல்ட் அனிகிறோம்,
எதற்கு....?. நம் உயிரைப் பாதுகாக்கத் தானே...!
பகைவனைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஏன் இந்த பாதுகாப்பு..? என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது.......
இவ்வாறு உயிரைக்குடிக்கும் ஒன்றை பெண்னாக சித்தரித்தால்..........



கொடி இடையாள்,

குணத்தில் கொடூரமுடையாள்,

மணத்தில் நெடியுடையாள்..!,

இவளுக்கு பல பெயர்கள்..?

இவள் வசம் பலபேர்கள்..!

நெருப்பால் தன்னை எரித்து - நம்,

நெஞ்சயே எரித்து விடுகிறாள்..!!

தன்னைத் தொட்டவனை - இவள்

சும்மா விட்டதில்லை.!,

தொட்டவனுக்கு - இவள்,

இதயப்புகை வென்மையாக,

இருப்பினும் நம்பாதீர்கள்..?

நம் இதயம் கருத்துவிடும்..!,

கடையில் அது வாங்கினால்,

இது இலவசம் என்பதுபோல்,

இவளைத் தொட்டால்..?

ஆஸ்துமா முதல்...!

ஆண்மைக்குறைவு வரை இலவசம்..!

ஆண்டாண்டு காலமாய் - நம்மை,

ஆட்டிவைக்கும் - இவள் ஒரு,

நவீன விபச்சாரி..!!.

ஆக்கம் : கவி ஹக்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

புகைபிடிப்போர் முதுமை அடைவதில்லை..??


ஆச்சரியமாக இருக்கிறதா....இக்கதையைப் படியுங்கள்....!!


மக்கள் அதிகம் கூடும் கடைத் தெருவில் ஒரு பெட்டிக்கடையிலே பெருங்கூட்டம் முண்டியடித்துக்கொண்டு நின்றது..!. இச்சிறிய பெட்டிகடையில் இவ்வளவு கூட்டமா..?. என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்க்காக நானும் அருகில் சென்றேன். அப்போது கடைக்காரன் " இது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அதி விஷேட 'சிகரட் ', இதைப் புகைத்தால் புகை இன்பம் மட்டுமல்ல இன்னும் பல நன்மைகள் இதிலுண்டு" என்று விளம்பரம் செய்துகொண்டிருந்தான். எனக்கோ ஆச்சரிய்ம் " அப்படி அதிலென்ன விஷேட நன்மைகள் உள்ளன..?" என்று கேட்டேன்


அதற்கவன் " இந்த சிகரட்டைப் புகைத்தால் வயோதிகம் வந்தணுகாது. இதை பாவிப்பவரின் வீட்டுக்கு திருடன் வரமாட்டான். இதைப்புகைத்தால் தெரு நாய்களின் தொல்லை இருக்காது.." என்று உருதிமொழியே கொடுத்தான்.


இதை கேட்டவுடன் "கையிருப்பு இல்லை" என்று கூறும் அளவுக்கு அமோக வியாபாரம் நடந்தது. உடனே எனக்கு கோபம் வந்து அந்த கடைக்காரனிடம் "ஏப்பா பொய்யான வாக்குருதி கொடுத்து வியாபாரம் செய்கிறாய், மக்களை ஏமாற்றுகிறாயா..?" என்று கண்டிப்புடன் கேட்டேன்.


அதற்கு அந்த கடைகாரன் சற்று சிரித்துக்கொண்டே "சார் நீங்க கோவப்படுகிற அளவுக்கு நான் பொய் சொல்லலியே, உன்மையைத் தானே சொன்னேன்..!!. அதாவது இந்த சிகரட்டை புகைத்தால் வயோதிகம் வராது என்றேன். ஏனென்றால் புகைப்பதால் நோய்வாய்ப்பட்டு புகை பிடிப்பவன் வயோதிகம் வரும் முன்பே இறந்துவிடுகிறான்.


இதை புகைப்பவன் வீட்டுக்குத் திருடன் வரமாட்டன் என்று சொன்னேன். ஏன் தெரியுமா..?. புகைப் பிடிப்பதால் எழும்புருக்கி நோய், மற்றும் இருமலினால் புகைப்பவன் இரவு பகல் என்று பாராமல் இருமிக்கொண்டே இருப்பான். வீட்டுக்காரன் விழித்துக்கொண்டிருக்கிறான் என நினைத்து திருடன் வரமாட்டான்.


புகைப்பிடிப்பவன் பலவீனமுற்று நடக்கச் சக்தியில்லாமல் விரைவில் கம்பு ஊண்டித்தான் நடக்க வேண்டிவரும். கையில் கம்போடு திரிபவனிடம் நாய்கள் நெருங்காதே..!. அதனால் தான் அவ்வாறு சொன்னேன்". என்று விளக்கம் சொன்னான்.


போட்டிபோட்டுக்கொண்டு வாங்கிய மக்கள் விழிபிதுங்கி சென்றனர்.. போலி இன்ப நுகர்ச்சி கிடைத்தாலும் அதன் விளைவுகள் பயங்கரமானவை..!!



மது, சூது, சோதிடம் ஆகியன


சாத்தானின் எளிய செயல்களாகும்


இவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.!


வெற்றியாளர்களாவீர்கள்.


அல்குர் ஆன் 5:90

சனி, 14 பிப்ரவரி, 2009

இறைவனிடம் சில கேள்விகள்


இறைவா.......

சினை முட்டையாய்,

இரத்தக் கட்டியாய்,

சதைப் பிண்டமாய்,

படிமுறைகள் பல பெற்று,

சிசுவாக மாறும் கருவறை யாவும்,

ஒன்று தானே...? இல்லை.....

மதத்திற்கு தகுந்தாற்போல்,

மாற்றி அமைத்திருக்கிறாயா..?

பின்னே ஏன்,

கருவறையில் பிறந்து..

மண்னறைக்கு போவதற்குள்.!!

மதத்தால், ஜாதியால்,

மொழியால், இனத்தால்,

பிளவுபட்டு..! கலவரத்தால்,

மாய்ந்து போகிறார்கள்..!!

ஓ.......??

மக்கள் தொகையைக் குறைக்கும்,

மாற்றுவழிதான் பிரிவுகளோ..?

கரு உலகில் நழுவி,

கலி உலகில் விழும்.!,

சிசுவிற்கு..!!

மதமுண்டா இறைவா..?

இனமுண்டா இறைவா..?

பிறகுதானே பிடிக்கிறது "மதம்"..!

நீ... படைக்கும் போது ,

பொருத்தவேண்டியதை,

பொருத்திவிட்டாய் தானே..? - இல்லை,

ஆறில் ஒன்றை அகற்றிவிட்டாயா..?,

ஆம்......

ஆடு, மாடு போல்..!,

முட்டி மோதிக்கொள்ளும்,

மனிதனைக் கண்டால்..,

அப்படித்தான் தோன்றுகிறது..!!,

மதம், ஜாதி - என்று,

மதம் பிடித்து ஆடாமல்.!

மனிதத்தை வளர்தால்...!!

குறைந்துவிடுமா உயிரிழப்புகள்..?

கூறு இறைவா கூறு..!!

உன் கூற்றைக் கேட்டுதான்,

மாற்றவேண்டும் சரித்திரத்தை...!!


ஆக்கம்:- "கவி" ஹக்

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று...?

(ஆடி அடங்கும் வாழ்கையடா. ஆறடி நிலமே சொந்தமடா.?)

எல்லாம் வல்ல இறைவன் மனித வர்க்கத்தை ஆதம்-ஹவ்வா (அலை) என்ற ஒரே ஜோடியிலிருந்தே படைத்திருக்கிறான். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தை வழியில் வந்தவர்கள். அவர்களது இறைவனும் ஒருவனே. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி நேர்வழி ஒன்றே. இறைவனால் அனுப்பப்ட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே குரலில் அந்த ஒரே கொள்கையை போதித்துள்ளனர். இந்த நிலையில் மனிதரிடையே பற்பல மதங்கள். அந்த பற்பல மதங்களிலும் பற்பல பிரிவுகள் - பிளவுகள் - வேற்றுமைகள். மனிதர்களில் இந்த பிளவுகளும் பிரிவுகளும் ஏற்படக் அடிப்படைக் காரணம் என்ன?

ஆதம் (அலை) அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பும்போதே அல்லாஹ் தெளிவாக இவ்வாறு எச்சரித்துள்ளான்.
நாம் சொன்னோம்: :நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய நேர்வழியை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அன்றி யார் மறுத்து, நமது வசனங்களைப் பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக நெருப்பின் தோழர்கள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அல்குர்ஆன் 2:38,39)

ஆதம் (அலை) அவர்களை வானவர்களைவிடவும் உயர்ந்தவர்களாக சிறப்பித்துக் காட்டினான். அப்படிப்பட்ட ஒரு நபியை தன் சொந்த அபிப்பிராயப்படி செயல்படக்கூடாது எனவும் எனது கட்டளைப்படியே செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினான். அவனது கட்டளைக்கு மாறு செய்தால் அடையப்போவது மீளா நரகமாகும் என்று எச்சரிக்கவும் செய்கிறான். அல்லாஹ்வுடைய வஹி மூலம் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களின் நிலையே இதுவென்றால் மற்ற மனிதர்களின் நிலைப்பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. நிச்சயமாக மனிதர்களில் யாரும் சொந்த அபிப்பிராயங்களை இறைவனது நேர்வழியில் புகுத்த முடியாது. அது மாபெரும் தவறு என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆயினும் மனிதர்களில் யாரும் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதில்லை. கல்லை வணங்கும் மனிதனும் அது இறைவனுக்கு பிடித்தமான செயல் என்று நம்பியே செயல்படுகிறான். இதற்குக் காரணம் மனிதனை வழிகெடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஷைத்தான் மனிதனது உள்ளத்தில் நல்லதைப் போன்று தீமையைப் புகுத்தி இறைவனுக்கு மாறு செய்யும் நிலைக்குக் கொண்டு சேர்த்து விடுகிறான். இதனை:

செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல்குர்ஆன் 18:103,104)

ஷைத்தான் எவ்வாறு இந்நிலையை உருவாக்குகிறான்?
மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்யத் துணியமாட்டான் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள ஷைத்தான், இறை கொடுத்த நேர்வழியில் நடப்பதாக நம்ப வைத்து அந்த நேர்வழியில் பல இடைச் செருகல்களைச் சொருக வைத்து விடுகிறான். நேர்வழியில் நடப்பதும் ஒன்றுதான். அந்த நேர்வழியில் நடந்த சென்ற முன்னோர்களையும் மூதாதையர்களையும் பின்பற்றுவதும் ஒன்றுதான் என்ற வசீகரத் தோற்றத்தை உண்டு பண்ணி விடுகிறான். இதனை சாதாரணமாகப் படிப்பவர்களும் இதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றே நினைப்பார்கள். ஆழ்ந்து நோக்கும்போது இறை கொடுத்த நேர்வழியை அறிந்து நடப்பதற்கும், நேர்வழியை நடந்தவர்களைப் பின்பற்றுவதற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகவே புரியும்.

நேர்வழி அறிந்து நடப்பதில் தவறு ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஆனால் நேர்வழி அறிந்து நடந்தவர்களின் செயல்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சரியாகவே இருக்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அவர்களிலும் இறை கொடுத்த நேர்வழிக்கு முரணாகச் சில சம்பவங்கள் இடம்பெற்று விடலாம். இந்த நிலையில் இறை கொடுத்த நேர்வழி அறியாது நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள், அவர்கள் அறியாது செய்த தவறுகளையும் மார்க்கமாக நம்பிச் செயல்படும் குற்றத்திற்கு ஆளாகிறார்கள். இங்கு இறைவனது நேர்வழியைப் பார்த்துச் செயல்பட்ட நல்லடியார்களிடம் இடம் பெற்ற தவறுகளை அல்லாஹ் மன்னிக்க வழி இருக்கிறது. காரணம் அல்லாஹ் மனிதன் தனது கட்டளைப்படி நடக்க முற்படுகிறானா? என்றே சோதிக்கிறான். அந்த முயற்சியில் ஈடுபட்டுச் சரியாக நடந்தால் இரண்டு நன்மைகள். முயற்சியில் ஈடுபட்டுப் பின் தவறாக நடந்தால் முயற்சிக்கு ஒரு நன்மை. தவறுக்கு குற்றம் பிடிக்க மாட்டான்.

இறைவன் கொடுத்த நேர்வழியை அறியாது முன் சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள் மூன்று தவறுகளைச் செய்கிறார்கள். வசனம் 2:38ன் படி இறைவன் கொடுத்த நேர்வழியை அறிய முயற்சிக்கவில்லை. இது ஒரு தவறு. அடுத்து "உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வெறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்" (அல்குர்ஆன் 7:3) என்ற இறை வசனத்தை பொய்யாக்கி முன் சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுவது இரண்டாவது பெருங்குற்றமாகும். முன்னோர்களைப் பின்பற்றுவதைக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு முன்னோரைப் பின்பற்றி தங்களுக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்து விடுகிறார்கள். இது மூன்றாவது பெருங்குற்றமாகும். எனவே இவர்கள் இறைவனது தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

காலங்காலமாக ஆதத்தின் சந்ததிகள் இப்படி முன்னோர்களைப் பின்பற்றித்தான் வழிகேட்டில் சென்றுள்ளார்கள் என்பதற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றுகளாக இருக்கின்றன. உதாரணமாக:
மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்குர்ஆன் 2:170)

இறை கொடுத்த நேர்வழியிலிருந்து வழி சறுகச் செய்யவே ஷைத்தான் முன்னோர்களைப் பின்பற்றும் மோகத்தை மனிதனுக்கு ஊட்டுகிறான். இதனால் மனிதனை வழிகெடுக்க ஷைத்தானுக்கு இரண்டு வித வாய்ப்புகள் அவனுக்கு கிடைக்கின்றன. மனிதர்கள் அடிப்படையில் முன்னோர்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற தவறான செயல்களையும் மார்க்கமாக எடுத்து நடந்து வழிதவறிச் செல்லச் செய்யும் சந்தர்ப்பம் ஒன்று. முன்னோர்களின் பெயரால் பொய்யானவைகளை இட்டுக்கட்டி அவற்றை எடுத்து நடப்பதன் மூலம் வழி தவறிச் செல்லச் செய்யும் வாய்ப்பு மற்றொன்று. எப்படியும் முன்னோர்களின் பெயரால் மனிதனை வழி தவறச் செய்து விடுகிறான் ஷைத்தான். இப்படி முன்னோர்களின் பெயரால் வழி தவறிச் சென்று அதன் காரணமாக நரகத்தை அடைந்து, அங்கு கடுமையான வேதனை அளிக்கப்படும் போது தான் அந்தத் தவறை உணர்ந்து கூச்சல் போடுகிறான். அதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்;

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்.
"எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவருக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.

"எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களை பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக"(என்பர்) (அல்குர்ஆன் 33:66-68)
இந்த அவர்களின் கதறல் அவர்களுக்குப் பலன் அளிக்காது. நரகை விட்டும் தப்ப வேண்டுமென்றால் இவ்வுலகிலேயே முன்னோர்களைப் பின்பற்றுவது தவறு என்று உணர்ந்து, அதை விட்டும் விலகி அல்லாஹ்வின் நேர்வழியான அல்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் விளங்கிப் பின்பற்ற முன்வரவேண்டும்.

நன்றி: ரீட் இஸ்லாம்.நெட்