சனி, 14 பிப்ரவரி, 2009

இறைவனிடம் சில கேள்விகள்


இறைவா.......

சினை முட்டையாய்,

இரத்தக் கட்டியாய்,

சதைப் பிண்டமாய்,

படிமுறைகள் பல பெற்று,

சிசுவாக மாறும் கருவறை யாவும்,

ஒன்று தானே...? இல்லை.....

மதத்திற்கு தகுந்தாற்போல்,

மாற்றி அமைத்திருக்கிறாயா..?

பின்னே ஏன்,

கருவறையில் பிறந்து..

மண்னறைக்கு போவதற்குள்.!!

மதத்தால், ஜாதியால்,

மொழியால், இனத்தால்,

பிளவுபட்டு..! கலவரத்தால்,

மாய்ந்து போகிறார்கள்..!!

ஓ.......??

மக்கள் தொகையைக் குறைக்கும்,

மாற்றுவழிதான் பிரிவுகளோ..?

கரு உலகில் நழுவி,

கலி உலகில் விழும்.!,

சிசுவிற்கு..!!

மதமுண்டா இறைவா..?

இனமுண்டா இறைவா..?

பிறகுதானே பிடிக்கிறது "மதம்"..!

நீ... படைக்கும் போது ,

பொருத்தவேண்டியதை,

பொருத்திவிட்டாய் தானே..? - இல்லை,

ஆறில் ஒன்றை அகற்றிவிட்டாயா..?,

ஆம்......

ஆடு, மாடு போல்..!,

முட்டி மோதிக்கொள்ளும்,

மனிதனைக் கண்டால்..,

அப்படித்தான் தோன்றுகிறது..!!,

மதம், ஜாதி - என்று,

மதம் பிடித்து ஆடாமல்.!

மனிதத்தை வளர்தால்...!!

குறைந்துவிடுமா உயிரிழப்புகள்..?

கூறு இறைவா கூறு..!!

உன் கூற்றைக் கேட்டுதான்,

மாற்றவேண்டும் சரித்திரத்தை...!!


ஆக்கம்:- "கவி" ஹக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக