| ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும். மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன். மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர். ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்! மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன். ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது. மற்றவர்: எப்படிச் சொல்றீங்க? ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது. மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி. ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே! மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பாவும் வித்தியாசம் தெரியாது.! ............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ...... ............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........ ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது.எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையைவெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு,வேலைக்காரனிடம்,இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க,அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார்.அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர்,அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார்.அவனும்,'அரசே,நான்தூங்கவில்லை.வானில்இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார்.அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.' அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து பார்த்த போதுவேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப் பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?''என்று கேட்டார். அவன் சொன்னான்,'அரசே,உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ............. ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ...... ............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........ மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள். அங்கே எமதர்மன். அவர்களில் முதலாமவனை அழைத்து ‘நீ சின்ன வயதில் ஒரு பறவையைக் கல்லால் அடித்துக் கொன்றாய். அதனால் உனக்குத் தண்டனையாக மிக கோரமான, நோய் பிடித்த பெண்ணை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்’ என்றார். அடுத்தவனுக்கும் அதே தண்டனை. அதே காரணம் மூன்றாவது நபருக்கு மட்டும் ஐஸ்வர்யாராய் மாதிரி ஒரு அழகியைத் திருமணம் செய்து வைத்தார். நொந்து போன இரண்டு நண்பர்களும், அவனுக்கு மட்டும் ஏன் இத்தனை அழகான பெண்? என்று எமனிடம் கேட்டார்கள். எமனின் பதில் இதுதான். 'இந்த கேசுல தண்டனை அந்த பொண்ணுக்கு" புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளலாம்.. ............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........ |
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 13 மே, 2010
குட்டிக்கதைகள்
திங்கள், 25 மே, 2009
"ஒற்றுமை" சொல்லும் எருமை
காட்டில் கொழுத்த எருமைக்கூட்டம் ஒன்று எப்போதும் ஒன்றாகவே மேய்ச்சலுக்கு சென்று ஒன்றாகவே படுக்கைக்கும் செல்லும் பழக்கமுடையன. இவை பலமுறை எதிரிகளை ஒன்றாக சேர்ந்து ஓட ஓட விரட்டி அடித்திருக்கின்றன.
ஆனால் காட்டு ராஜாவான சிங்கம் எப்படியாவது எருமைகளின் மாமிசத்தை ருசிக்க என்னியது. இருப்பினும் எருமைகளின் கூற்மையான கொம்பைக்கண்டுதான் அச்சமுற்றது. இதற்கு வழி என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது. அவ்வழியே ஒரு நரி வந்தது. சிங்கத்தின் கவலைதோய்ந்த முகத்தைக்கண்ட நரி காரணத்தை கேட்டறிந்து சிரித்தது இவ்வளவுதானா..? கவலையை விடுங்கள் எனக்கு ஒரு நாள் மட்டும் அவகாசம் தாருங்கள் அதன் பிறகு பாருங்கள் என் புத்தி கூற்மையை என்றது நரி.
அடுத்த நாளே தனது வேலையை ஆரம்பித்தது நரி. ஒவ்வொரு எருமையையும் தனித் தனியாக சந்தித்த நரி. "நீ ரொம்ப பயந்தாங்கொள்ளியாம். கோழையாம். அதனால் தான் நீ மற்ற எருமைகளின் துணையோடு திரிகிறாயாம். என்று மற்ற எருமைகள் உன்னை தாழ்வாகப் பேசிக்கொள்கின்றன" என்று தனது வஞ்சக சூழ்ச்சியை அவிழ்த்து விட்டது.
அடுத்தநாள் சதியை மதியால் வெல்லத் தெரியாத எருமைகள் தனிதனியே பிரிந்து மேயத்தொடங்கின. சிங்கத்தின் வேலை சுலபமானது நாளொரு எருமையாக கொன்று தனது ஆசையை தீர்த்துக்க்கொண்டது.
இந்த கதை எதற்கு என்றால் ஒரு சமுதாயத்தினுடைய எழுச்சியும் வளர்ச்சியும் ஒற்றுமை என்ற அச்சாணியிலேதான் உள்ளது. ஒற்றுமை குலைந்ததனால் அழிவையும் இழிவையும் தழுவிக்கொண்ட சமுதாயங்கள் ஏராளம்.
தமிழீழக்கனவும் தவிடுபொடியானது இந்த ஒற்றுமையின்மையால் தான். இனி எஞ்சியிருக்கும் சமுதாயமாவது ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப் பிடித்துக்கொண்டால் கானொளியில் கண்டதைப்போன்று வெற்றிபெற்ற சமுதாயமாக வாழலாம்.
வியாழன், 26 பிப்ரவரி, 2009
அயல்நாட்டு வேலை (பாகம்-3)
எல்லோருடைய வாழ்கையிலும் இருபதைத் தாண்டியதும் ஏற்படும் இன்ப அதிர்ச்சி இவன் வாழ்கையிலும் ஏற்ப்பட்டது. அவனுக்கு வீட்டில் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது. " வெளிநாட்டு மாப்பிள்ளை, கை நிறைய சம்பாரிக்கிறார்" (கக்கூஸ் கழுவினாலும் கை நிறைய சம்பாரிக்கிறார்லல..). என்ற வெட்டி தம்பட்டத்தோடு வீடு வீடாக வடை, காப்பி சாப்பிட்டு வந்தார்கள். ஒருவழியாக இந்த அடிமைக்கும் ஒரு அடிமை மாட்டினாள். பேச வேண்டியதை பேசி மாற்றவேண்டியதை மாற்றி கல்யாணம் முடிவு செய்து அவனை ஊருக்கு வரச்சொன்னார்கள்.
ஆஹா...... அடிமை வாழ்க்கையின் அச்சானி முறிந்தது, விடியளைத் தேடி வென்புறா பறந்தது, என்று ஆனந்த கூத்தாடினான் அவன். ஆறு மாத சம்பளத்தை அப்படியே சேர்த்துவைத்து ஊருக்குப் போக ஜமான்கள் வாங்கினான் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து பொருட்களை வாங்கினான் குறை வரக்கூடாது என்பதற்காக...?. அவனுக்கும் தேவையான பொருள்களை வாங்கினான் (ஊரை ஏமாற்ற...?). பயணத்தை தொடங்கினான் பந்தங்களைக்காண ஆறத்தழுவி வரவேற்றார்கள் அவன் கொண்டுசென்ற பெட்டியை பார்த்தபடியே...?.
வெளிநாட்டில்இருந்து வருபவர்களின் வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களில்
பெட்டி பிறிப்பது என்பது முக்கியமானதாகும். சொந்தங்கள் சுற்றியிருக்க
பெட்டியை பிரித்து ஒனக்கு எனக்கு என எடுத்துக்கொள்வார்கள். அவ்வாறே அவனும் பிரித்தான். இந்தாங்க....... அம்மாவுக்கு கைலி, தாவனி, ஒடிக்களம்,
கோடாலிசாப் தைலம், அக்காவுக்கு சேலை, வாட்ச், லக்ஸ் சோப்பு,
டார்லி பவ்டர், இப்படி ஒவ்வொருவருக்கும் பகுந்து கொடுத்தும் குறை வந்தது. பத்துநாட்களுக்குள் பத்திரிக்கை அடித்து கல்யாணமும் வைத்தார்கள்.
தேன் நிலவு தெவிட்டாத இன்பம் இப்படியாக ஆறுமாத காலம் அரைநொடியாய் கறைந்தது. மனைவி போட்டுட்டு வந்த நகைகளும் வங்கியில் பாடம் படித்தது. "பழைய கிழவி கதவை தொரடி" என்பது போல் அடிமை வாழ்க்கை அவனை விடாது துறத்தியது. புறப்பட்டன் புறமுதுகிட்டு
ஐந்தாறு மாதங்கள் அணலாய் தாக்கியது. அவனுக்கு குழந்தையும் பிறந்தது. தாங்கமுடியா சந்தோசம். தான் பெற்ற பிள்ளையை காணத்துடித்தது அவன் மனம். புறப்பட என்னினான் ஆனால் வரும்போது வங்கியில் வைத்த நகை...? வேகத்தடையாய் நின்றது.
நினைத்து நினைத்து வருந்தினான் அவன், "ஊரிலேயே பிழைப்பை தேடியிருக்கலாமோ..?, சொந்தபந்தங்களோடு சொகமா வாழ்ந்து இருக்கலாமோ..?". அவன் மனமே அவனை குத்திக்குடைந்தது. "ஊரில் கூலிவேலை செய்பவன்கூட குடும்பத்தோட இருக்கானே" எனக்கு மட்டும் ஏன்..ஏன்...? இந்த பொலப்பு..? புலம்பி புலம்பி உலகை வெருத்தவன் போல் உலருகிறான் இங்கே.............!!
குறிப்பு:- இது ஒரு விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட கதை. இதில் உள்ள உன்மை ஒவ்வொரு வெளிநாடு வாழ்நம்மவர்களுக்கும் தெரிந்திருக்கும்.
நானும் ஒரு வெளிநாடுவாழ் அடிமைதான். நாம் படும் கஷ்டம் நம் பிள்ளைகளும் பட வேண்டாம். உள்ளூரிலேயே படிக்கவைப்போம். எந்த வேலையாக இருந்தாலும் அது நம் நாட்டிலேயே என்ற உருதி கொள்வோம்.
நம் எண்ணம், குறிக்கோள், அனைத்தும் உள்நாட்டு வேலையையே நாடினால் அதற்க்கான முயற்சியும் செய்தால் இன்ஷா அல்லாஹ் நமக்கு பிந்தியசமுதாயம் அடிமை சங்கிலியை அருத்தெரிந்து புதிய சகாப்தம் படைக்கும்..........!! முற்றும்....
என்றும் அன்புடன்... "கவி" ஹக்
ஆஹா...... அடிமை வாழ்க்கையின் அச்சானி முறிந்தது, விடியளைத் தேடி வென்புறா பறந்தது, என்று ஆனந்த கூத்தாடினான் அவன். ஆறு மாத சம்பளத்தை அப்படியே சேர்த்துவைத்து ஊருக்குப் போக ஜமான்கள் வாங்கினான் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து பொருட்களை வாங்கினான் குறை வரக்கூடாது என்பதற்காக...?. அவனுக்கும் தேவையான பொருள்களை வாங்கினான் (ஊரை ஏமாற்ற...?). பயணத்தை தொடங்கினான் பந்தங்களைக்காண ஆறத்தழுவி வரவேற்றார்கள் அவன் கொண்டுசென்ற பெட்டியை பார்த்தபடியே...?.
வெளிநாட்டில்இருந்து வருபவர்களின் வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களில்
பெட்டி பிறிப்பது என்பது முக்கியமானதாகும். சொந்தங்கள் சுற்றியிருக்க
பெட்டியை பிரித்து ஒனக்கு எனக்கு என எடுத்துக்கொள்வார்கள். அவ்வாறே அவனும் பிரித்தான். இந்தாங்க....... அம்மாவுக்கு கைலி, தாவனி, ஒடிக்களம்,
கோடாலிசாப் தைலம், அக்காவுக்கு சேலை, வாட்ச், லக்ஸ் சோப்பு,
டார்லி பவ்டர், இப்படி ஒவ்வொருவருக்கும் பகுந்து கொடுத்தும் குறை வந்தது. பத்துநாட்களுக்குள் பத்திரிக்கை அடித்து கல்யாணமும் வைத்தார்கள்.
தேன் நிலவு தெவிட்டாத இன்பம் இப்படியாக ஆறுமாத காலம் அரைநொடியாய் கறைந்தது. மனைவி போட்டுட்டு வந்த நகைகளும் வங்கியில் பாடம் படித்தது. "பழைய கிழவி கதவை தொரடி" என்பது போல் அடிமை வாழ்க்கை அவனை விடாது துறத்தியது. புறப்பட்டன் புறமுதுகிட்டு
ஐந்தாறு மாதங்கள் அணலாய் தாக்கியது. அவனுக்கு குழந்தையும் பிறந்தது. தாங்கமுடியா சந்தோசம். தான் பெற்ற பிள்ளையை காணத்துடித்தது அவன் மனம். புறப்பட என்னினான் ஆனால் வரும்போது வங்கியில் வைத்த நகை...? வேகத்தடையாய் நின்றது.
நினைத்து நினைத்து வருந்தினான் அவன், "ஊரிலேயே பிழைப்பை தேடியிருக்கலாமோ..?, சொந்தபந்தங்களோடு சொகமா வாழ்ந்து இருக்கலாமோ..?". அவன் மனமே அவனை குத்திக்குடைந்தது. "ஊரில் கூலிவேலை செய்பவன்கூட குடும்பத்தோட இருக்கானே" எனக்கு மட்டும் ஏன்..ஏன்...? இந்த பொலப்பு..? புலம்பி புலம்பி உலகை வெருத்தவன் போல் உலருகிறான் இங்கே.............!!
வெருப்பாத்தான் இருக்கு _ சில நேரம்,
வேம்பைக் கடிச்சதுபோல்,
கசப்பாத்தான் இருக்கு..!,
"ஆணி' காலனி போட்டுதான்,
ஆகாரம் தேடவேண்டுமோ..?,
கூனிக் குருகியபிறகுதான்,
குடும்பத்தைக் காணமுடியுமோ..?,
தேனீக்கள் பலலட்சம்,
தேடிவந்து கொட்டியது போல்,
தேகமெல்லாம் கடுக்குதப்பா..!!,
என்ன பொலப்பு இது..?,
எவன் கத்துக் கொடுத்தது இது..??,
எங்கே போய் சொல்லுற்து..,
நமக்கு பொறந்த புள்ள,
கருப்பா..?, சிவப்பான்னு..??,
கேவலம்..!
கோனிக்காவும், கோடாக்கும்,
சொல்லித்தான் தெரியனுமா..!?,
ஆருயிர் மனைவிகூட,
ஐ எஸ் டி கால் போட்டுதான்,
வாழனுமா...?
வேர பொலப்பு ஒன்னிருந்தா..?
விட்டிரலாம் இந்த பொலப்ப.,
ஊரு பொலப்பு ஒன்னு கெடச்சா..?
உருப்படியா வாழ்ந்திடலாம்...!.
குறிப்பு:- இது ஒரு விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட கதை. இதில் உள்ள உன்மை ஒவ்வொரு வெளிநாடு வாழ்நம்மவர்களுக்கும் தெரிந்திருக்கும்.
நானும் ஒரு வெளிநாடுவாழ் அடிமைதான். நாம் படும் கஷ்டம் நம் பிள்ளைகளும் பட வேண்டாம். உள்ளூரிலேயே படிக்கவைப்போம். எந்த வேலையாக இருந்தாலும் அது நம் நாட்டிலேயே என்ற உருதி கொள்வோம்.
நம் எண்ணம், குறிக்கோள், அனைத்தும் உள்நாட்டு வேலையையே நாடினால் அதற்க்கான முயற்சியும் செய்தால் இன்ஷா அல்லாஹ் நமக்கு பிந்தியசமுதாயம் அடிமை சங்கிலியை அருத்தெரிந்து புதிய சகாப்தம் படைக்கும்..........!! முற்றும்....
என்றும் அன்புடன்... "கவி" ஹக்
செவ்வாய், 24 பிப்ரவரி, 2009
அயல்நாட்டு வேலை (பாகம்-2)
அத்தனை வேலைப் பழுவிலும் கட்டிய பணத்திற்க்காகவாவது காலம் கடத்தவேண்டுமே..!, என்று புழுங்கிய அவனுக்கு முதல்மாத சம்பளகவர் ஆருதலாக இருந்தது. இந்த சந்தோசமான செய்தியை வீட்டிற்க்கு போன் செய்து சொல்வோம். என என்னியபோதுதான் ஞாபகம் வந்தது "அத்தா நீ நல்லபடியா சம்பாரிச்சி வாங்கிய முதல்மாத சம்பளத்தில் அல்லாஹ் பேரால கந்தூரி ஆக்கனும்னு நேந்துக்கிட்டேன்" என்று ஊரில் இருந்து புறப்படும்போது அவன் அம்மா கூறியது. உடனே பணத்தை அனுப்பிவைத்தான்.இப்படி சம்பளம் வாங்குவதும் அனுப்புவதுமாகவே காலம் ஓடியது. விடுமுறை நாட்களில் ஊர்க்காரர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுவந்தான். அவர்களின் நிலை கண்ட இவன் மனம் " அடப் பாவிகளா நீங்க ஊருக்கு வந்தா வெள்ள வேட்டி சட்டைபாக்கெட்டில் சலவைத்தாள்கள் என்று பண்ணிய பந்தாவை பார்த்துதானடா எனக்கும் இந்த நிலமை" என்றது. அவர்கள் இவனைக் கண்டதும் தங்கள் பொலப்பு இப்படித்தான் என்று இயல்பை விளக்கினார்கள்.
கடிகாரமுள்ளைக் காலில் கட்டிக்கொண்டதுபோல் சுழன்று வந்த அவன். செக்கில் பூட்டிய மாடுபோல பகலிரவாய் பாடுபட்டான் பட்டகடனை அடைக்க, நாட்காட்டி பார்க்காமலேயே நகர்த்திவிட்டான் நாட்களை.......!!. ஊர் ஞாபகங்கள் தான் ஒளிநாடாவாய் ஓடியது. ஓடித்திறிந்த தெருக்கள், பாடித்திறிந்த வயல்வெளிகள், தாலாட்டிய தாய். இப்படி ஒவ்வொன்றாய் வந்துவந்து மறைந்தன. அன்றுதான் தெரியும் அவனுக்கு தான் அயல்நாடு வந்து ஆயிரம்நாட்கள் கடந்துவிட்டது என்று...!. முட்டியது அழுகை... கொட்டினான் மணக்குமுறளை............. இதோ..........

பத்து நூறு நாட்களை,
மெத்தனமா கடத்திவிட்டேன்,
மிச்ச நாளும்...!
சொச்ச பொழுதும்,
நட்டுவச்ச கல்லுபோல,
நகர மாட்டேங்குது..?,
அம்மாவின் நினைவுகள்தான்,
அடிமனதின் ஆழத்தில்,
ஆயுதமாய் குத்துகிறது..!!,
பாசத்தை மறந்துதான்,
பணத்தைத் தேடவேண்டுமோ..?,
குமுருகிறதொரு மனம்..!
அடேய்....,
பணமிருந்தால் தானடா,
பாசமுள்ள மனசும்,
சந்தோசமாக இருக்கமுடியும்.
என்று எச்சரிக்கிறது..!,
இன்னொறு மனம் - இப்படி,
மனங்களின் மல்யுத்தத்தினூடே,
பிறக்க ஒரு ஊர்..!
பிழைக்க ஒரு ஊர்..!! - என்ற,
நம்மவர்களின் தலையெழுத்தில்,
நான் மட்டுமென்ன..?
விதிவிலக்கா..! - என்று
என்னினேன்....
என்னை நானே தேற்றிக்கொண்டேன்..!!
தொடரும்.....
திங்கள், 23 பிப்ரவரி, 2009
அயல்நாட்டு வேலை (பாகம்-1)
+2 வை பாதியிலேயே நிறுத்திவிட்டான் அப்துல்லாஹ் (கற்பனைப்பெயர்). அன்று அவனது வீடே சொந்தங்களால் நிறைந்து இருந்தது..?. நேற்றே அவன் சொந்த பந்தங்களின் வீட்டுக்கெல்லாம் சென்று பயணம் சொல்லி வந்துவிட்டான். அப்போது எல்லோரும் அவனுக்கு குடிக்க பால் கொடுத்தார்கள் (வழக்கம் போல). நெருங்கிய உறவினர்கள் பணமும் வைத்துக்கொடுத்தார்கள் (மொடையாக இருக்கும் போது கேக்கலாம் என்றோ என்னவோ..?) .
அன்று முழுவதும் அவனுக்கு சாப்பாடும் ஏறவில்லை, தூக்கமும் வரவில்லை. வெளிநாடு எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டெ தனது கற்பணைக் குதிரையைத் தட்டிவிட்டான்.....!. 'பணம் மழையாக கொட்டுகிறது. இவன் பில்கேட்ஷின் பேரன்போல அதில் புறல்கிரான்..',. " மாப்ளே" , "மாப்ளே" கற்பனையை கலைக்கிறது ஒரு குறள். திரும்பிப்பார்த்தால் அவன் தாய் மாமு..?. இத்தனை நாளும் எட்டிபாற்காத மனுசன் அன்று அவிழ்த்து விட்டார் அட்வைசுகளை.... "மாப்ளே பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் பத்திரமா எடுத்து வச்சாச்சா, போய் இறங்கியதும் மாமுக்கு போன் போடுங்க, அங்க போய் நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கனும் யார் வம்புக்கும் போகப்புடாது". என்று அடுக்கிக்கொண்டே போனார். அவனுக்கு புரிந்தது அது அவர் மகளை கட்டிவைக்க போடும் அஸ்திவாரமென்று..!.
சொந்தங்கள் புடைசூழ பள்ளிவாசல் சென்று பேரிச்சம்பழம், கற்கண்டு வைத்து பாத்திஹா ஓதிவிட்டு ஆயத்தமாகிறான் அடிமை வாழ்க்கைக்கு..?. சிலர் முருக்கு, கடலைமிட்டாய், அல்வா, மிச்சர் என்று விதவிதமான தின்பண்டங்களை ஏற்கனவே அயல்நாடுவாழ் அடிமைகளுக்கு குடுத்தனுப்பினார்கள் (அப்பவாவது குடும்ப நெனப்பு வரட்டும் என்றோ..?). சொந்தங்களைப் பிரியும் சோகத்தில் அவனுக்கு அழுகை முட்டியது..!. சொந்தங்களும் கண்னைக் கசக்கியவற்களாக வழியனுப்பி வைத்தார்கள்......
படித்துக்கொண்டு இருந்த அவனுக்கு இது ஒரு புதிய அனுபவம் தான். அவன் தாய் நாட்டைத் துறந்து ஏரோப்பிலேனில் ஏறியது முதல் இறங்கும் வரை எதையோ இழந்தவன் போல் இருந்தான். வெளிநாடு என்றால் படுக்க வைத்து பணம் கொடுப்பார்கள் என்றே இதுநாள்வரை அவன் நினைத்திருந்தான்..! (பாவம் பணம் கொடுத்து ஏற்க்கும் அடிமைப் பதவி இது என்பதை அறியவில்லை போலும்). ஏர்போட்டில் இறங்கியதும் ஏஜண்ட் வந்து அழைத்துச்சென்று பூட்டிவிட்டான் இயந்திரத்தின் ரெக்கயிலே..... 1 நாள், 2 நாள், 3 நாள் வேலைக்குப் பிறகு.... உடலின் வலி அவனுக்கு உண்மையை கூறியது....

பள்ளிப் பருவத்திலேயே பாலாப்போன
வெளிநாட்டு மோகம்..!.
பகல் இரவாய் பசுமரத்து ஆணிபோல் பதிகிறது,
படிக்கும் வயதிலேயே பறக்க ஆசைப்படுகிறான்.
இதற்கு... உள்ளூரில் பிழைக்கத்தெரியாமல்
அயல்நாடு சென்று திரும்பும் நம்மவர்கள் செய்கின்ற
ஆடம்பரம் தான்..? அத்தனைக்கும் ஆரம்பம்..!. ஆம்,
அங்கே 6 க்கு 6 அறையினிலே நாலு பேரு தங்கிக்கிட்டு
நல்ல சாப்பாடு, நல்ல துணிமணி உடுத்தாமல்..
சேத்துவைத்த காசில் "கோல்டு வாட்சும் ,
மார்டின் சட்டையும் , ஒன்மேன் ஷோ செண்டும் ,
உதட்டருகே ரோத்மேன் சிகரெட்டும்".
மூன்று வருடம் உழைத்த காசை மூன்று மாதத்தில்..?
கரைத்துவிட்டு கப்பலேரிப் போவோரைத் தானே நாம்
ரோல் மாடலாக எடுத்துக்கொள்கிறோம்.
உள்ளூரில் உழைப்பதை நாம் ஏன் சிந்திப்பதில்லை..?,
வெளிநாடு சென்றால் ஜாலியாக இருக்கலாம்..!
கொட்டிக்கிடக்கும் காசுகளை கோனிப்பையில்
அள்ளிவிடலாம், என்ற அல்ப ஆசையினால் தானே..!.
அயல் நாட்டில் காலடி எடுத்துவைக்கும் ஒவ்வொரு
இளைஞனின் இதயத் துடிப்புதான் இங்கே.................
அன்று முழுவதும் அவனுக்கு சாப்பாடும் ஏறவில்லை, தூக்கமும் வரவில்லை. வெளிநாடு எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டெ தனது கற்பணைக் குதிரையைத் தட்டிவிட்டான்.....!. 'பணம் மழையாக கொட்டுகிறது. இவன் பில்கேட்ஷின் பேரன்போல அதில் புறல்கிரான்..',. " மாப்ளே" , "மாப்ளே" கற்பனையை கலைக்கிறது ஒரு குறள். திரும்பிப்பார்த்தால் அவன் தாய் மாமு..?. இத்தனை நாளும் எட்டிபாற்காத மனுசன் அன்று அவிழ்த்து விட்டார் அட்வைசுகளை.... "மாப்ளே பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் பத்திரமா எடுத்து வச்சாச்சா, போய் இறங்கியதும் மாமுக்கு போன் போடுங்க, அங்க போய் நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கனும் யார் வம்புக்கும் போகப்புடாது". என்று அடுக்கிக்கொண்டே போனார். அவனுக்கு புரிந்தது அது அவர் மகளை கட்டிவைக்க போடும் அஸ்திவாரமென்று..!.
சொந்தங்கள் புடைசூழ பள்ளிவாசல் சென்று பேரிச்சம்பழம், கற்கண்டு வைத்து பாத்திஹா ஓதிவிட்டு ஆயத்தமாகிறான் அடிமை வாழ்க்கைக்கு..?. சிலர் முருக்கு, கடலைமிட்டாய், அல்வா, மிச்சர் என்று விதவிதமான தின்பண்டங்களை ஏற்கனவே அயல்நாடுவாழ் அடிமைகளுக்கு குடுத்தனுப்பினார்கள் (அப்பவாவது குடும்ப நெனப்பு வரட்டும் என்றோ..?). சொந்தங்களைப் பிரியும் சோகத்தில் அவனுக்கு அழுகை முட்டியது..!. சொந்தங்களும் கண்னைக் கசக்கியவற்களாக வழியனுப்பி வைத்தார்கள்......
படித்துக்கொண்டு இருந்த அவனுக்கு இது ஒரு புதிய அனுபவம் தான். அவன் தாய் நாட்டைத் துறந்து ஏரோப்பிலேனில் ஏறியது முதல் இறங்கும் வரை எதையோ இழந்தவன் போல் இருந்தான். வெளிநாடு என்றால் படுக்க வைத்து பணம் கொடுப்பார்கள் என்றே இதுநாள்வரை அவன் நினைத்திருந்தான்..! (பாவம் பணம் கொடுத்து ஏற்க்கும் அடிமைப் பதவி இது என்பதை அறியவில்லை போலும்). ஏர்போட்டில் இறங்கியதும் ஏஜண்ட் வந்து அழைத்துச்சென்று பூட்டிவிட்டான் இயந்திரத்தின் ரெக்கயிலே..... 1 நாள், 2 நாள், 3 நாள் வேலைக்குப் பிறகு.... உடலின் வலி அவனுக்கு உண்மையை கூறியது....

பள்ளிப் பருவத்திலேயே பாலாப்போன
வெளிநாட்டு மோகம்..!.
பகல் இரவாய் பசுமரத்து ஆணிபோல் பதிகிறது,
படிக்கும் வயதிலேயே பறக்க ஆசைப்படுகிறான்.
இதற்கு... உள்ளூரில் பிழைக்கத்தெரியாமல்
அயல்நாடு சென்று திரும்பும் நம்மவர்கள் செய்கின்ற
ஆடம்பரம் தான்..? அத்தனைக்கும் ஆரம்பம்..!. ஆம்,
அங்கே 6 க்கு 6 அறையினிலே நாலு பேரு தங்கிக்கிட்டு
நல்ல சாப்பாடு, நல்ல துணிமணி உடுத்தாமல்..
சேத்துவைத்த காசில் "கோல்டு வாட்சும் ,
மார்டின் சட்டையும் , ஒன்மேன் ஷோ செண்டும் ,
உதட்டருகே ரோத்மேன் சிகரெட்டும்".
மூன்று வருடம் உழைத்த காசை மூன்று மாதத்தில்..?
கரைத்துவிட்டு கப்பலேரிப் போவோரைத் தானே நாம்
ரோல் மாடலாக எடுத்துக்கொள்கிறோம்.
உள்ளூரில் உழைப்பதை நாம் ஏன் சிந்திப்பதில்லை..?,
வெளிநாடு சென்றால் ஜாலியாக இருக்கலாம்..!
கொட்டிக்கிடக்கும் காசுகளை கோனிப்பையில்
அள்ளிவிடலாம், என்ற அல்ப ஆசையினால் தானே..!.
அயல் நாட்டில் காலடி எடுத்துவைக்கும் ஒவ்வொரு
இளைஞனின் இதயத் துடிப்புதான் இங்கே.................
அழகிய ரோஜா என,
அள்ளிப் பறிக்க வந்தோமே.
அதனடியில் முட்கலென்று,
அறியாமல் போனோமே..!,
ஆனதினால் என் செய்வது..?,
ஆகாயம் கடந்துவிட்டோமே,
இயந்திர வாழ்க்கையடா இப்பூவில்.!,
இருப்பினும் பரவாயில்லை..?
இஸ்லாத்தின் இனியமணம்,
ஈற்க்கத்தான் செய்கிறது..!,
உறவுகளை மறந்தால்தானே,
ஊதியத்தைப் பார்க்க முடியும்.
எருதுகளுடன் பூட்டிய,
ஏறு போல...!
ஒத்து சென்றால்தானே,
ஓங்கி வளரமுடியும்..!
ம்ம்ம்ம்.......?
பூவடியில் முள்ளிருந்தாலும்,
பூ கொடுக்கும் தேனெடுக்க..?,
அயல்நாட்டு வண்டுகள்,
அதனருகே.....
மொய்க்கத்தான் செய்கிறது.....!!
...................................................................................
தொடரும்.........
தொடரும்.........
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009
புகைபிடிப்போர் முதுமை அடைவதில்லை..??

ஆச்சரியமாக இருக்கிறதா....இக்கதையைப் படியுங்கள்....!!
மக்கள் அதிகம் கூடும் கடைத் தெருவில் ஒரு பெட்டிக்கடையிலே பெருங்கூட்டம் முண்டியடித்துக்கொண்டு நின்றது..!. இச்சிறிய பெட்டிகடையில் இவ்வளவு கூட்டமா..?. என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்க்காக நானும் அருகில் சென்றேன். அப்போது கடைக்காரன் " இது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அதி விஷேட 'சிகரட் ', இதைப் புகைத்தால் புகை இன்பம் மட்டுமல்ல இன்னும் பல நன்மைகள் இதிலுண்டு" என்று விளம்பரம் செய்துகொண்டிருந்தான். எனக்கோ ஆச்சரிய்ம் " அப்படி அதிலென்ன விஷேட நன்மைகள் உள்ளன..?" என்று கேட்டேன்
அதற்கவன் " இந்த சிகரட்டைப் புகைத்தால் வயோதிகம் வந்தணுகாது. இதை பாவிப்பவரின் வீட்டுக்கு திருடன் வரமாட்டான். இதைப்புகைத்தால் தெரு நாய்களின் தொல்லை இருக்காது.." என்று உருதிமொழியே கொடுத்தான்.
இதை கேட்டவுடன் "கையிருப்பு இல்லை" என்று கூறும் அளவுக்கு அமோக வியாபாரம் நடந்தது. உடனே எனக்கு கோபம் வந்து அந்த கடைக்காரனிடம் "ஏப்பா பொய்யான வாக்குருதி கொடுத்து வியாபாரம் செய்கிறாய், மக்களை ஏமாற்றுகிறாயா..?" என்று கண்டிப்புடன் கேட்டேன்.
அதற்கு அந்த கடைகாரன் சற்று சிரித்துக்கொண்டே "சார் நீங்க கோவப்படுகிற அளவுக்கு நான் பொய் சொல்லலியே, உன்மையைத் தானே சொன்னேன்..!!. அதாவது இந்த சிகரட்டை புகைத்தால் வயோதிகம் வராது என்றேன். ஏனென்றால் புகைப்பதால் நோய்வாய்ப்பட்டு புகை பிடிப்பவன் வயோதிகம் வரும் முன்பே இறந்துவிடுகிறான்.
இதை புகைப்பவன் வீட்டுக்குத் திருடன் வரமாட்டன் என்று சொன்னேன். ஏன் தெரியுமா..?. புகைப் பிடிப்பதால் எழும்புருக்கி நோய், மற்றும் இருமலினால் புகைப்பவன் இரவு பகல் என்று பாராமல் இருமிக்கொண்டே இருப்பான். வீட்டுக்காரன் விழித்துக்கொண்டிருக்கிறான் என நினைத்து திருடன் வரமாட்டான்.
புகைப்பிடிப்பவன் பலவீனமுற்று நடக்கச் சக்தியில்லாமல் விரைவில் கம்பு ஊண்டித்தான் நடக்க வேண்டிவரும். கையில் கம்போடு திரிபவனிடம் நாய்கள் நெருங்காதே..!. அதனால் தான் அவ்வாறு சொன்னேன்". என்று விளக்கம் சொன்னான்.
போட்டிபோட்டுக்கொண்டு வாங்கிய மக்கள் விழிபிதுங்கி சென்றனர்.. போலி இன்ப நுகர்ச்சி கிடைத்தாலும் அதன் விளைவுகள் பயங்கரமானவை..!!
மது, சூது, சோதிடம் ஆகியன
சாத்தானின் எளிய செயல்களாகும்
இவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.!
வெற்றியாளர்களாவீர்கள்.
அல்குர் ஆன் 5:90
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)