வெள்ளி, 17 ஏப்ரல், 2009

கள்ள ஓட்டை எல்லாம் நல்ல ஓட்டா மாற்றுவது எப்படி..?


பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் பம்பரமாய் சுழன்றுகொண்டு இருப்பார்கள். எந்தந்த பகுதிகளில் எப்படியெல்லாம் பொய்சொல்லலாம் வாக்குறுதிகளை அள்ளிவீசலாம் என்று யோசித்து யோசித்தே பெரும்பாலும் அரசியல்வாதிகள் வழுக்கையாகவே காணப்படுகிறார்கள். பாராளுமன்றத்தை தூக்கி நிறுத்தும் உருப்பினர்கள் பணத்தாலேயே நிர்னயிக்கப்படுகிறார்கள். சாதியை ஒழிப்போம் சாதி இல்லா தமிழ்நாடு உருவாக்குவோம் என்று முழங்குபர்கள் எல்லாம். அந்த சாதி அங்க வெல்லுமா..?. இந்த சாதி நம்மை ஆதரிக்குமா என்று சாதிக்கொறு சங்கங்களை சேர்த்துக்கொண்டு சகட்டு மேனிக்கு புழுகுவார்கள். இன்னும் சம்பாரிக்க ஏதாவது வழிகிடைக்காதா என்று கூனிக்குறுகி ஓட்டு கேட்கும் அரசியல்வாதிகளும். அவர்களின் இனிப்பான பேச்சைக்கேட்டு விழிபிதுங்கும் வாக்காளர்கலும். தான் இங்கே கதாநாயகர்கள்.

இதெல்லாம் அரசியல்ல சகஜம்பா..!!. ன்னு நீங்க சொல்றது எனக்கு புரியிது. சாக்கடையை நோண்டினா நாறத்தானே செய்யும். பாத்தீங்களா...? நான் சொல்லவந்தது என்ன . இப்ப சொல்றது என்ன . ஒரேயொறு வேண்டுகோள்ங்க..?. அதாவது ஒரு நாட்டினுடைய வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களித்து ஒருவர் வெற்றிபெற்றால் தான் அது முழுமையான வெற்றி. வெரும் 40% முதல் 60% வரை ஓட்டு விழுந்தால் மற்றவர்கள் என்ன ஆனார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களில் லட்சக்கனக்கானவர்கள் வக்களிக்க இயலாமல் போய்விடுகிறது. இதை பயன்படுத்தி கள்ள ஓட்டு போட்டு தகுதியே இல்லாத ஒருவன் வெற்றி பெருகிறான் .

இதற்கு வழிதான் என்ன..?. தமிழர்கள் அதிகமாக பிழைப்பைத் தேடி செல்லும் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், மேழும் எங்கெல்லாம் இந்திய கடப்பிதழ் உள்ளவர்கள் நிறைந்து இருக்கிறார்களோ அங்கெல்லாம் அந்த அந்த நாட்டு இந்தி (இந்திய) தூதரகம் மூலமாக அவர்களும் வாக்களிக்க வழிவகை செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் ஒவ்வொறு இந்திய குடிமகனும் தங்களுடைய வாக்குரிமையை செழுத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுக்களாம். இந்தியாவைவிட வரியநாடான இந்தோனேசியாவில் இம்முறை நடைமுறையில் உள்ளது.

சென்றவாரம் அங்கு நடந்த தேர்த்லில் கூட அண்டை நாடான மலேசியாவில் வேலை செய்யும் இந்தோனேசியர்கள் வாக்களிக்க ஏதுவாக ஒவ்வொரு தபால் அலுவலகத்திலும் அதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு வக்குரிமையை செழுத்தினார்கள். இது போன்ற ஏற்ப்பாடுகளை இந்திய அரசாங்கமும். மேற்கொண்டால். கள்ள ஓட்டை தவிர்த்து நல்ல ஓட்டை பெற்று வெள்ளலாம். எந்த ஆட்சியாளர்களாவது முயற்சி செய்வார்களா..?


(என் கூற்றில் உன்மை இருந்தால், உடன்பாடு இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடுங்கள் உங்கள் மனக்கண்னைத் திறந்து.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக