புதன், 10 ஜூன், 2009

எல்லாமே இலவசம்...?

சேலை வாங்கினால் கைக்குட்டை இலவசம். மாடுவாங்கினால் கன்றுக்குட்டி இலவசம். இது வழமையாக கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் நம் தங்கத்தமிழகத்திலோ என்னை ஆட்சியில் அமரவைத்தால் அரிசி முதல் அல்வா வரை இலவசம். இலவசப் பொருட்கள் உன்மையிலேயே ஏழைகளுக்கு பயனளிக்கிறதா..?.

அன்மையில் பாராளுமன்றத்திலே லால்லு பிரசாத் அவர்கள் பேசினார். அரசு வழங்கும் இலவசப்பொருட்களினால் ஏழைகள் பயனடைவது இல்லை. மாறாக அரசியல்வாதிகள் தான் பயன் அடைகிறார்கள். நீங்கள் இலவசமாக வழங்கும் அரிசியை வடித்து வைத்துக்கொண்டு என்னசெய்வது அதற்கு ஊற்றிக்கொள்ள யார் கொடுப்பார்கள். என்று அவருக்கெ உரிய லொல்லுடன் பேசினார்.

" நீ பசித்திருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாக வழங்குவதை விட நீ அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு அது அவனுக்கு அனுதினமும் சோறு போடும்" இது சீனப் பழமொழி இது ஏன் நம் தமிழக அரசியல் தழைவர்களுக்கு புரியவில்லை.

அரசியல்வாதிகள் தான் கொடுக்கிறார்கள் என்றால் இந்த மக்கள் ஏன் மயங்கினார்கள். இது நம் நாட்டிற்க்கு ஆரோக்கியமானதல்ல இலவசத்தை விட்டுவிட்டு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குங்கள். அனைவருக்கும் வேலை என்ற நிலை வந்துவிட்டால். சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிச்செல்லலாம் நாம். இதற்கு தடைக்கற்களாக இருக்கும் இலவசம் என்னும் பிச்சையை..? நாம்தான் தடுக்கவேண்டும். ஆம் நம் காசை வாங்கிக்கொண்டு நமக்கே பிச்சைபோடுகிறார்கள். அய்யா...... ஒரு தொலைக்காட்சிப்பெட்டி எம்புட்டு காசு இன்னக்கெல்லாம் ரூ.1500 வரும் அத இலவசமா வாங்கிக்கிட்டு மல்லாக்க படுத்துக்கிட்டு சீரியல் பாக்குறோம். ஆனா நாம் அன்றாடம் பயன்படுத்தும் பஸ்கட்டணம்,மளிகை பொருட்கள்,மின்கட்டணம், இன்னும் எத்தனை எத்தனையோ கட்டணங்களை குறைத்தால் (இலவசமாக அல்ல) ரூ 1500 என்ன ரூ10000 க்கே சொந்தமா தொலைக்காட்சிப்பெட்டி வாங்கலாமே..?. இது ஆரம்பம் தான் இது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டால்.... இனி வரும் காலங்களில் குடிமகன்களுக்ககு போத்தல் இலவசம், புகைமகன்களுக்கு பாக்கெட் இலவசம் என்பார்கள் எச்சரிக்கை "விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொல்வார்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக