திங்கள், 23 ஆகஸ்ட், 2010

மரண அறிவிப்பு

கரிசவயல் (பத்துக்காடு) நெய்னாமுகமது (வழுக்கமண்டை) அவர்களுடைய இளைய மகன் அஜ்மிருடைய மனைவி வாவாம்மா இன்று அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது வரதட்டனை கொடுமையால் நடந்திருக்கலாம் என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆறுமாதத்திற்க்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது நமது ஊரிலேயே நடந்திறாத ஒரு சம்பவம் ஆகும். பரக்கத்தினுடைய மாதமான ரமழானில் இப்படி ஒரு சோக நிகழ்வு ஊரையே சோகத்தில் உறைய வைத்திருக்கிறது. பொருத்திருந்து பாப்போம் யார் குற்றவாழி என்று...?. அல்லாஹ் மிகப் பெரியவன்.

2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்

    இந்த தற்கொலை வரதச்சனை பிரச்சனையால் என்றால் நம்ம ஊரில் வரதச்சனை கொடுத்து மற்றும் வாங்கி யாரெல்லாம் திருமனமுடித்தார்களோ அவர்கள் அனைவரும் அல்லாவின் கேள்விக்கு உட்படுத்தப்படுவார்கள்.
    இனிமேலாவது ஆண்டவனை அஞ்சிகொல்லுங்கள்.

    அஜ்மீர் அலி

    பதிலளிநீக்கு
  2. உன்மைதான்...! நமது சமுதாயத்தில் புறையோடிக்கிடக்கும் இக்கொடுமை மாற தாங்களை போன்ற படித்த இளைஞர்கள் பிரச்சார பீரங்கிகளாக செயல்பட வேன்டும்.

    பணம் படைத்தவர்கள் பைக் கார் என்று ஆடம்பரமாக கொடுப்பதால்தான் ஏழைகளும் இக்கொடுமைக்கு ஆழாகிறார்கள். நமது ஊரிலே நிச்சயம் என்ற பெயரிலே நமது ஜமாஅத்தே முன்னின்று பேரம் பேசும் முறைகள்தானே இது நாள் வரை நடக்கிறது........என்று தனியும் இந்த கொடுமை அல்லாஹ் தான் அறிவான்.

    பதிலளிநீக்கு