செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

பெண் தற்கொலை: கணவர் உள்பட 4 பேர் மீது புகார்

பேராவூரணி,ஆக. 23: பேராவூரணி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது கணவர் உள்பட 4 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பேராவூரணி அருகேயுள்ள பத்துக்காட்டைச் சேர்ந்தவர் நைனாமுகமது மகன்
அஜ்மீர் அலி (28) இவருக்கும், ஈரோடு மாவட்டம், ஐங்கேனிகோரையைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மகள் வாவாம்மாள் (24) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ரம்ஜானுக்கு சீர் கொடுப்பதற்காக ஈரோட்டிலிருந்து வாவாம்மாளின் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பத்துக்காடு வந்தனர். அப்போது சீர்வரிசை குறைவாக உள்ளதாகக் கூறி, அஜ்மீர் அலி குடும்பத்தினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வாவாம்மாள் திங்கள்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்துல் அஜீஸ் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரில் தனது மகள் சாவுக்கு மாமியார் முகமது பீவி மாமனார் நைனாமுகமது, கணவர்
அஜ்மீர் அலி, நாத்தனார் நூர்ஜகான் ஆகியோர்தான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

நன்றி : தினமணி

1 கருத்து: